அனைத்து இஸ்லாம் நூலகம்

74 - பானங்கள்

1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவ மன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான்.2 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) மதுவும் (மற்றொன்றில்) பாலும் இருந்த இரு கிண் ணங்கள் கொண்டுவரப்பட்டன. அவர்கள் அவ்விரண்டையும் பார்த்துவிட்டுப் பால் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘‘இயற்கை மரபில் உங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயமே வழி தவறிப்போயிருக்கும்” என்று சொன்னார் கள்.3 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

3

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்துபோவதும், விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.4 அத்தியாயம் :

4

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகின்றவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றின் (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல் மலிக் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து (தம் தந்தை) அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தமக்கு அறிவித்துவந்ததாகக் கூறினார்கள். மேலும், அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள், ‘‘(என் தந்தை) அபூபக்ர் (ரஹ்) அவர்கள் இந்த (ஹதீஸில் இடம்பெற்றுள்ள மூன்று) விஷயங்களுடன் (நான்காவதாக), ‘‘(மக்களின்) மதிப்புமிக்க செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளையடிப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்” என்பதையும் (நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக) சேர்த்து அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.5 அத்தியாயம் :

5

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (திராட்சையால் தயாரிக்கப்படும்) மது மதீனாவில் சிறிதும் இல்லாதிருந்த நிலையில் அது தடை செய்யப்பட்டது.7 இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

6

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மது எங்களுக்குத் தடை செய்யப் பட்டது. அது தடை செய்யப்பட்டபோது மதீனாவில் திராட்சையால் தயாரிக்கப்படும் மது சிறிதளவே எங்களுக்குக் கிடைத்து வந்தது. எங்கள் மதுபானங்களில் பெரும்பலானவை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங் கனிகளாலும் ஆனவையாகும். அத்தியாயம் :

7

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையின்மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்தபின்) ‘‘ஐந்து வகைப் பொருட்களால் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன: திராட்சை, பேரீச்சம்பழம், தேன், கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை. ஆக, அறிவுக்குத் திரையிடுவதெல்லாம் மதுவேயாகும்” என்று சொன்னார்கள்.8 அத்தியாயம் :

8

அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉபைதா (ரலி), அபூதல்ஹா (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக்கொண்டி ருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று சொன்னார். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘எழுந்திரு, அனஸே! இவற்றைக் கொட்டிவிடு” என்று சொன்னார்கள். நான் அவற்றைக் கொட்டிவிட்டேன்.9 அத்தியாயம் :

9

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரி டையே நின்று என் தந்தையின் சகோதரர் களுக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களால் ஆன மதுவை ஊற்றிக்கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனா யிருந்தேன். அப்போது ‘‘மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று சொல்லப் பட்டது. உடனே (என் உறவினர்கள்) ‘‘அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் கவிழ்த்து(க் கொட்டி)விட்டேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘‘அவர்களுடைய மது எத்தகையது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பேரீச்ச செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்” என்று சொன்னார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ‘‘(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று சொன்னார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை. என் தோழர்களில் ஒருவர் கூறுகிறார்: அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அதுதான் அவர் களின் அன்றைய மதுபானமாக இருந்தது” என்று சொல்ல நான் கேட்டிருக் கிறேன். அத்தியாயம் :

10

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்றைய தினம் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் பேரீச்சம்பழத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டதுதான் மதுபானமாகும் என்றிருந்த நிலையில் மது தடை செய்யப்பட்டது. அத்தியாயம் :

11

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ (தேனிலிருந்து தயாரிக் கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.11 அத்தியாயம் :

12

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ குறித்துக் கேட்கப்பட்டது. -அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும்.- யமன்வாசிகள் அதை அருந்திவந்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘போதை தரும் (மது) பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்ட தேயாகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

13

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்” என்று சொன்னதாக அனஸ் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித் தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவ்விரண்டுடன் மண் சாடியையும் பேரீச்சமரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப் பானையையும் சேர்த்து அறிவித்துவந்தார்கள். அத்தியாயம் :

14

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள்: மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம்பழம், கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, தேன் ஆகியவையே அந்தப் பொருட்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக்கூடியதாகும்.12 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவான தொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு: 1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?13 2. ‘கலாலா’ என்றால் என்ன?14 3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்.15 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹய்யான் அத்-தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஆமிர் பின் ‘அபீ (ரஹ்) அவர்களிடம், ‘‘அபூஅம்ரே! சிந்து சமவெளியில் அரிசியால் தயாரிக்கப்படும் ஒரு வகை (மது)பானம் உள்ளதே? (அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அது ‘நபி (ஸல்) அவர்களது காலத்தில்’ அல்லது உமர் (ரலி) அவர்களது காலத்தில்’ இருந்ததில்லை” என்று பதிலளித்தார்கள். மற்றோர் அறிவிப்பில் (ஐந்து வகைப் பொருட்களில் முதலாவதாக) ‘திராட்சை’ என்பதற்குப் பதிலாக ‘உலர்ந்த திராட்சை’ என்று வந்துள்ளது. அத்தியாயம் :

15

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மது ஐந்து பொருட்களிருந்து தயாரிக்கப்படுகிறது. அவை: 1. உலர்ந்த திராட்சை2. பேரீச்சம்பழம் 3. கோதுமை 4. தொலி நீக்கப்படாத கோதுமை 5. தேன். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 அத்தியாயம் :

16

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘அபூஆமிர் (ரலி) அவர்கள்’ அல்லது ‘அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்’ என்னிடம் கூறினார்கள் -அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை.- (அவர்கள் கூறியதாவது:) நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், ‘‘நாளை எங்களிடம் வா” என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள்மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள்வரை உருமாற்றிவிடுவான்.17 அத்தியாயம் :

17

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தமது திருமணத்திற்கு அழைத்தார்கள். அப்போது மணப் பெண்ணாயிருந்த அவர்களின் துணைவியாரே நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் தெரியுமா? அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத் திருந்தார். (மணவிருந்து உண்டபின் நபியவர்களுக்கு அந்தப் பழச்சாற்றை அவர் புகட்டினார்.)18 அத்தியாயம் :

18

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில வகைப் பாத்திரங்களுக்கு (அவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென)த் தடை விதித்தார்கள். அப்போது (மதீனாவாசிகளான) அன்சாரிகள் ‘‘அவை எங்களுக்குத் தேவைப்படுகின்றனவே!” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் தடை இல்லை. (அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்)” என்று சொல்லிவிட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘நபி (ஸல்) அவர்கள் (சிலவகைப்) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று தடை விதித்தபோது...” என்று வந்துள்ளது. அத்தியாயம் :

19

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப் பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, ‘‘மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே” என்று சொல்லப் பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித் தார்கள். அத்தியாயம் :

20

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும் தார் பூசப்பட்ட பாத்திரத் தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது. அத்தியாயம் :

21

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம், ‘‘எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத் தகாதது என இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (வினவினேன்). இறைநம்பிக்கையாளர் களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ‘‘சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லையா?” என நான் கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள், ‘‘நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :

22

சுலைமான் பின் அபீசுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் பச்சைநிற சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்” என்று அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். அப்போது ‘‘வெண்ணிற களிமண் பாத்தி ரத்தில் நாங்கள் அருந்தலாமா?” என்று வினவினேன். அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் ‘‘இல்லை. (அதுவும் கூடாது)” என்று சொன்னார்கள்.20 அத்தியாயம் :

23

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது திருமணத்திற்கு அழைத்தார்கள். அன்று மணப்பெண்ணாக இருந்த அபூஉசைதின் துணைவியாரே அவர்களுக்குப் பணிவிடை புரிபவராக இருந்தார். அவர், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக என்ன ஊறவைத்திருந் தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களுக்காகப் பேரீச்சம்பழங்களை கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் இரவிலேயே ஊறவைத்தேன். (நபியவர்கள் உணவு உண்டபின் அந்த ஊறலை அவர்களுக்குப் புகட்டினேன்)” என்று சொன்னார்.21 அத்தியாயம் :

24

அபுல் ஜுவைரியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களி டம், ‘பாதக்’ எனும் பானம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘(இவர்கள் மதுவுக்கு) ‘பாதக்’ எனும் புதுப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பே (மது அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும் என) முஹம்மத் (ஸல்) அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆகவே, போதையூட்டும் எதுவாயினும் அது தடை செய்யப்பட்டதுதான்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(‘பாதக்’ எனும் கெட்டியாகக் காய்ச்சப்பட்ட திராட்சைப் பழச்சாறு) அனுமதிக்கப்பட்ட நல்ல பானமாயிற்றே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அனுமதிக்கப்பட்ட நல்ல பொருளுக்கு அப்பால் தடை செய்யப்பட்ட கெட்ட பொருளைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

25

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள்.25 அத்தியாயம் :

26

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூதல்ஹா, அபூதுஜானா, சுஹைல் பின் பய்ளா (ரலி) ஆகியோருக்கு நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்கள் மற்றும் (கனிந்த) பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றின் கலப்பு ஊறலை ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது மது தடை செய்யப்பட்டது. உடனே நான் அதை எறிந்துவிட்டேன். நான் அவர்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பவனாகவும் அவர்களில் வயதில் சிறியவனாகவும் இருந்தேன். நாங்கள் அந்தக் கலவையை அன்று மதுவாகவே கருதினோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

27

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம்பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

28

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை யும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்றுசேர்(த்து ஊறவை)ப்பதை யும், பேரீச்சம்பழத்தையும் உலர்ந்த திராட்சையையும் ஒன்றுசேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றை யும் தனித்தனியாக ஊறவைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்). அத்தியாயம் :

29

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களிடம் பால்கிண்ணமும் மதுக்கிண்ணமும் கொண்டுவரப்பட்டன.27 அத்தியாயம் :

30

உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அரஃபாவில் தங்கியிருந்தபோது) ‘அரஃபா’ (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளன்று நோன்பு நோற்றுள்ளார்களா (இல்லையா) என மக்கள் சந்தேகப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொடுத்தனுப்பினேன். (அதை) அவர்கள் அருந்தினார்கள்.28 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அரஃபா’ நாளன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா (இல்லையா) என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆகவே, உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு கிண்ணத்தில் பாலை) அனுப்பி வைத்தார்கள்” என்று (‘‘உம்முல் பள்ல் (ரலி) அவர்களிடமிருந்து இதைத் தாம் கேட்டதாகச் சொல்லாமல்) நேரடியாக அறிவித்ததுண்டு. அவர்களிடம், ‘‘இது (அறிவிப்பாளர் தொடரில் முறிவு ஏற்படாத) மவ்ஸூலா(ன ஹதீஸா)? அல்லது (அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்டுள்ள) முர்சலா(ன ஹதீஸா)?” என்று கேட்கப்பட்டால், ‘‘இதை உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறேன் (ஆகவே, இது ‘மவ்ஸூல்’தான்)” என்று பதிலளிப்பார்கள். அத்தியாயம் :

31

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் ‘அந்நகீஉ’ (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

32

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவரான அபூஹுமைத் (ரலி) அவர்கள் ‘அந்நகீஉ’ எனும் இடத்திலிருந்து பால் நிரம்பிய பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டுவந்திருக்கக் கூடாதா?” என்று அவரிடம் கேட்டார் கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

33

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு மக்காவிலிருந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து) வந்தார்கள். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை) அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடன் இருந்தபோது நாங்கள் ஓர் ஆட்டிடையனைக் கடந்துசென்றோம். அபபோது நான் (ஆட்டிலிருந்து) ஒரு கிண்ணத்தில் சிறிது பால் கறந்(து நபியவர்களுக்குக் கொடுத்)தேன். நான் திருப்தியடையும்வரை அதை நபி (ஸல்) அவர்கள் பருகினார்கள். (எங்களைப் பிடிக்க) சுராக்கா பின் ஜுஉஷும் ஒரு குதிரையில் எங்களை நோக்கி வந்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது சுராக்கா தமக்கெதிராகப் பிரார்த்திக்க வேண்டாமென்றும், தாம் திரும்பச் சென்றுவிடுவதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார் கள்.29 அத்தியாயம் :

34

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால்தருகின்ற ஒட்டகமும், (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகின்ற ஆடும்தான் தர்மங்களிலேயே சிறந்த தாகும். (அதிலிருந்து) காலையில் ஒரு கிண்ணத்திலும் மாலையில் ஒரு கிண்ணத்திலும் நீ பால் கறந்துகொள் ளலாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30 அத்தியாயம் :

35

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால் அருந்திவிட்டு வாய் கொப்புளித்தார்கள். அப்போது, ‘‘இதில் (பால்) கொழுப்பு இருக்கிறது” என்று சொன்னார்கள்.31 அத்தியாயம் :

36

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘மிஅராஜ்’ எனும் விண்ணுலகப் பயணத்தின்போது வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு நான்கு நதிகள் (ஓடிக்கொண்டு) இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் (ஓடிக்கொண்டு) இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நீல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் இரண்டு நதிகள் சொர்க்கத்தி லுள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரு நதிகளாகும். அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டுவரப்பட்டன. பால் கிண்ணம், தேன்கிண்ணம், மதுக்கிண்ணம் ஆகியவைதான் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து (அதை) அருந்தினேன். அப்போது என்னிடம், ‘‘நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்” என்று சொல்லப்பட்டது. இதை அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32 இதே ஹதீஸ் மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் (சொர்க்கத்து) நதிகள் குறித்து மேற்கண்டபடி அறிவிக்கப்பட்டுள்ளது. (ஆனால்,) மூன்று கிண்ணங்கள் பற்றி குறிப்பிடவில்லை. அத்தியாயம் :

37

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் ஏராளமான பேரீச்சமரங்களுடைய (பெரும்) செல்வராக இருந்தார். அவருடைய செல்வங்களில் ‘பைருஹா’ எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். ‘‘நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்” எனும் (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், ‘நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாத வரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்’ எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது ‘பைருஹா’ (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும், அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியுள்ள வழியில் அதைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நல்லது. அது ‘(மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே!’ அல்லது ‘அது நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!’ என்று கூறினார்கள். -அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (இவ்வாறு) சந்தேகத்துடன் அறிவிக்கிறார்.- (தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், ‘‘தர்மம் செய்வது குறித்து) நீங்கள் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘(அவ்வாறே) செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” எனக் கூறிவிட்டுத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் அபீஉவைஸ் (ரஹ்) அவர்களும் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களும் ‘நன்மை கிடைத்துவிட்ட செல்வம்தானே!’ என்றே அறிவித்துள் ளார்கள்.33 அத்தியாயம் :

38

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை நான் பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றி ருந்து (நீர் எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் கிராமவாசி ஒருவரும் அமர்ந்திருந்தனர். (தாம் அருந்திய) பான் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, ‘‘வலப் பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)” என்று சொன்னார்கள்.34 அத்தியாயம் :

39

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூபக்ர்) உடன் ஓர் அன்சாரியிடம் சென்றார்கள். நபி ஸல்) அவர்கள் அந்த அன்சாரியிடம், ‘‘உங்களிடம் இன்று இரவு தோல்பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் இருந்தால் (அதை எங்களுக்குப் புகட்டுங்கள்). இல்லையென்றால் நாங்கள் (இந்தத் தொட்டியில்) வாய் வைத்துக் குடித்துக்கொள்வோம்” என்று சொன் னார்கள். அப்போது அந்த அன்சாரி தமது தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் இரவிலேயே (தோல் பையில் ஊற்றி) வைத்த தண்ணீர் உள்ளது. பந்தலுக்கு வாருங்கள்” என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றார். அங்கு கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன்மீது தமது வளர்ப்பு ஆட்டிலிருந்து (பால்) கறந்து ஊற்றினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதை) அருந்தினார்கள். பிறகு அவர் களுடன் வந்த அந்த நண்பரும் (அபூபக்ர்) அருந்தினார்.35 அத்தியாயம் :

40

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட்களையும் தேனையும் விரும்பி வந்தார்கள்.37 அத்தியாயம் :

41

நஸ்ஸால் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. (அதை) அவர்கள் நின்றுகொண்டே அருந்தி னார்கள். பிறகு ‘‘மக்களில் சிலர் நின்றுகொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால், (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

42

நஸ்ஸால் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் தமது (ஆட்சியின்போது) லுஹ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு கூஃபா நகர(ப் பள்ளிவாசல்) முற்றத்தில் மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக அமர்ந்தார்கள். அதற்குள் அஸ்ர் தொழுகை வந்துவிட்டது. பிறகு தண்ணீர் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் (அதை) அருந்திவிட்டுத் தமது முகத்தையும் தம் இரு கைகளையும் கழுவினார்கள். -அறிவிப்பாளர் ஆதம் பின் அபீஇயாஸ் (ரஹ்) அவர்கள், தலை மற்றும் கால்களையும் குறிப்பிட்டார்கள்.- பிறகு எழுந்து அதன் மீதியை நின்று கொண்டு பருகினார்கள். பிறகு, ‘‘மக்கள் சிலர் நின்றுகொண்டு (நீர்) அருந்துவதை வெறுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களோ நான் செய்ததைப் போன்று செய்தார்கள்” என்று சொன்னார் கள். அத்தியாயம் :

43

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ‘ஸம்ஸம்’ கிணற்றிலிருந்து (நீர்) பருகினார்கள். அத்தியாயம் :

44

உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அரஃபா தினமான துல்ஹிஜ்ஜா ஒன்பதாம் நாளன்று) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் கிண்ணம் ஒன்றை அனுப்பினேன். அவர்கள் அரஃபா நாளின் அந்த மாலை நேரத்தில் (அரஃபா பெருவெளியில்) நின்றுகொண்டி ருந்தார்கள். அவர்கள் தமது கரத்தால் (அக்கிண்ணத்தை) எடுத்து அதைப் பருகினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மாலிக் (ரஹ்) அவர்கள் அபுந்நள்ர் சாலிம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் தமது அறிவிப்பில் ‘‘ஒட்டகத்தின் மீது இருந்தபடி (பருகினார்கள்)” என்று கூடுதலாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.39 அத்தியாயம் :

45

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப் பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப் பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் (அந்தப் பாலை) பருகிவிட்டுப் பிறகு (மிச்சத்தை) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட் டார்கள். மேலும், ‘‘வலப் பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)” என்று சொன்னார்கள்.40 அத்தியாயம் :

46

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப் பக்கம் சிறுவர் ஒருவரும், இடப் பக்கம் முதியவர் களும் அமர்ந்திருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘‘(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன்” என்று பதில் சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள்.41 அத்தியாயம் :

47

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூபக்ர்) உடன் அன்சாரி ஒருவரிடம் (அவரது தோட்டத்திற்குச்) சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழரும் (அந்த அன்சாரிக்கு) ‘சலாம்’ (முகமன்) கூறினர். அந்த அன்சாரி பதில் சலாம் சொல்லிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இது வெப்பமான வேளை!” என்றார். அப்போது அவர் தமது தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரவில் தோல்பையில் (ஊற்றி) வைத்த தண்ணீர் உம்மிடம் இருந்தால் (எங்களுக்குத் தாருங்கள்). இல்லாவிட்டால் நாங்கள் (இரைத்து ஊற்றப்பட்டுள்ள இந்த நீரைத் தொட்டியில்) வாய்வைத்துக் குடித்துக்கொள்கிறோம்” என்று சொன் னார்கள். (தமது) தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அந்த அன்சாரி, ‘‘அல்லாஹ் வின் தூதரே! இரவில் தோல்பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் என்னிடம் உள்ளது” என்று கூறியபடி பந்தலை நோக்கி நடந்தார். பின்னர் அவர் கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன் மீது தமது வளர்ப்பு ஆட்டிலிருந்து பால் கறந்து (அதில் கலந்து)விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அதைப்) பருகினார்கள். பிறகு மறுபடியும் அவர் கொண்டுவந்தார். (அதை) நபி (ஸல்) அவர்களுடன் வந்திருந்த மனிதர் பருகினார்.42 அத்தியாயம் :

48

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரி டையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களால் ஆன மதுவை ஊற்றிக் கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாக இருந்தேன். அப்போது ‘‘மது தடை செய்யப்பட்டு விட்டது” என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினார்கள்) ‘‘அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் கவிழ்த்து(க் கொட்டி) விட்டோம். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘அவர்களுடைய மது எத்தகையது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘பேரீச்சச் செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்” என்று சொன்னார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ‘‘(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது” என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை. என் தோழர்களில் ஒருவர் கூறினார்: அனஸ் (ரலி) அவர்கள், ‘‘அதுதான் அவர்களின் அன்றைய மதுபானமாக இருந்தது” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.43 அத்தியாயம் :

49

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால்’ அல்லது ‘அந்திப் பொழுதாகி விட்டால்’ உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ் வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின்மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.44 அத்தியாயம் :

50

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடி வையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :

51

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல்பைகளை ‘இக்தினாஸ்’ செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார் கள். அதாவது அவற்றின் வாய்ப் பகுதியை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீர் பருகுவதைத் தடை செய்தார்கள். அத்தியாயம் :

52

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல்பைகளை ‘இக்தினாஸ்’ செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை நான் கேட்டுள்ளேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘இக்தினாஸ்’ என்றால், தோல்பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும் என மஅமர் (ரஹ்) அவர்களோ மற்றவர் களோ அறிவித்தார்கள். அத்தியாயம் :

53

அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இக்ரிமா (ரஹ்) அவர்கள் எங்களிடம் ‘‘அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த சிறுசிறு விஷயங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” (என்று கேட்டுவிட்டு) ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோலால் ஆன தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றும், ஒருவர் தம் அண்டைவீட்டார் தமது வீட்டுச் சுவரில் (உத்திரம் உள்ளிட்ட) மரக்கட்டையைப் பதிப்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

54

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

55

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து (தண்ணீர்) குடிக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அத்தியாயம் :

56

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (ஏதேனும்) பருகும்போது பாத்திரத்தில் மூச்சுவிட வேண்டாம். நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது உங்கள் பிறவி உறுப்பை வலக் கையால் தொட வேண்டாம். நீங்கள் சுத்தம் செய்யும்போது வலக் கையால் சுத்தம் செய்ய வேண்டாம். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48 அத்தியாயம் :

57

ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) அனஸ் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்ததாகச் சொன்னார்கள்.49 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

58

அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) ‘அல்மதாயின்’ (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (அக்னி ஆராதனை யாளரான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) ‘‘நான் இவரை(ப் பலமுறை) தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக்கொள்ளாததால் தான் நான் இதை அவர்மீது வீசியெறிந் தேன். நபி (ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும் அவர்கள், ‘‘அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியவையாகும்” என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.51 அத்தியாயம் :

59

இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களு டன் புறப்பட்டோம். அவர்கள், ‘‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியவையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.52 அத்தியாயம் :

60

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகின்றவன் தனது வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

61

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களை(க் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளியிடம் நலம் விசாரித்தல், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லல், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லல், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளல், சலாம் எனும் முகமனைப் பரப்புதல், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுதல், சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவுதல் ஆகியவற்றை எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், (ஆண்கள்) பொன் மோதிரங் களை அணிய வேண்டாமென்றும், (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும், மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்த பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.53 அத்தியாயம் :

62

உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியாவது: (ஹஜ்ஜின்போது) நபி (ஸல்) அவர்கள் ‘அரஃபா’ (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் நோன்பு நோற்றிருந்தார்களா என மக்கள் சந்தேகப்பட்டனர். ஆகவே, அவர்களிடம் பால் கிண்ணம் ஒன்று அனுப்பிவைக்கப் பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் பருகினார்கள்.54 அத்தியாயம் :

63

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்துகொள்ள) அழைத்துவரும்படி அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்துவர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து ‘பனூ சாஇதா’ குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண் மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண் ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், ‘‘உங்களிட மிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் ‘‘என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), ‘‘இவர்கள் யார் என்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவள் ‘‘தெரியாது” என்று பதிலளித்தாள். மக்கள், ‘‘இவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்” என்று சொன்னார்கள். அந்தப் பெண் ‘‘அவர்களை மணந்துகொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவதியாகிவிட்டேனே” என்று (வருத்தத்துடன்) கூறினாள்.56 நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் முன்னே சென்று ‘பனூ சாஇதா’ குலத்தாரின் சமுதாயக்கூடத்தில் அமர்ந்துகொண்டார்கள். பிறகு ‘‘எங்களுக் குப் பருக (ஏதேனும்) கொடுங்கள், சஹ்லே!” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்: சஹ்ல் (ரலி) அவர்கள் அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பருகினோம். பிறகு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள். அத்தியாயம் :

64

ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களின் கிண்ணம் ஒன்றை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கண்டேன். அது பிளந்து விட்டிருந்தது. அதை அவர்கள் வெள்ளியால் ஒட்டவைத்தார்கள். அது ஒரு வகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்ட அகலமான உயர் ரகக் கிண்ணமாகும். அனஸ் (ரலி) அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்தக் கிண்ணத்தில் இத்தனை இத்தனை முறைகளைவிட அதிகமாகப் பருகக்கொடுத்துள்ளேன்” என்று சொன்னார்கள்.57 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தக் கிண்ணத்தில் இரும்பு வளையம் ஒன்றிருந்தது. அனஸ் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் தங்க வளையம் அல்லது வெள்ளி வளையம் ஒன்றைப் பொருத்த விரும்பினார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த எதையும் நீங்கள் மாற்றாதீர்கள்” என்று (அனஸ் (ரலி) அவர்களிடம்) கூற, அனஸ் (ரலி) அவர்கள் அதை (மாற்றாமல்) விட்டுவிட்டார்கள். அத்தியாயம் :

65

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது அஸ்ர் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது மிச்சமிருந்த சிறிதுத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. அது ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதில் தமது கையை நுழைத்துத் தம் விரல்களை விரித்தார்கள். பிறகு அவர்கள், ‘‘அங்கத் தூய்மை (உளூ) செய்பவர்களே! தண்ணீரிடம் வாருங்கள். இந்த வளம் (பரக்கத்) அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும்” என அழைத்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையே இருந்து தண்ணீர் பீறிட்டுப் பாய்வதை நான் கண்டேன். மக்கள் (அதில்) அங்கத் தூய்மை செய்து அதை அருந்தவும் செய்தார்கள். நான் அதை வயிறு நிரம்ப அருந்துவதில் குறைவைக்கவில்லை. ஏனெனில், அது வளம் (பரக்கத்) மிக்கது என நான் அறிந் திருந்தேன். அறிவிப்பாளர் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்?” என்று கேட்க, ‘‘நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தோம்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.58 அத்தியாயம் :