அனைத்து இஸ்லாம் நூலகம்

59 - படைப்பின் ஆரம்பம்

1

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘பனூ தமீம் கூட்டத்தாரே! நற்செய்தி பெறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள் (அது மட்டும் போதாது). அவ்வாறே எங்களுக்கு (தர்மமும்) கொடுங்கள்” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது.2 அப்போது யமன் நாட்டினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.3 நபி (ஸல்) அவர்கள், ‘‘யமன்வாசிகளே! (நான் வழங்கும்) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம்” என்று பதிலளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் படைப் பின் ஆரம்பத்தைக் குறித்தும் இறை அரியணை (அர்ஷ்) குறித்தும் பேசலானார் கள். அப்போது ஒரு மனிதர் வந்து (என்னிடம்), ‘‘இம்ரானே! உமது ஊர்தி ஒட்டகம் ஓடிவிட்டது” என்று கூறினார். (நான் ஒட்டகத்தைத் தேடச் சென்று விட்டேன்.) நான் எழுந்து செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.4 அத்தியாயம் :

2

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாயில் அருகே கட்டிப்போட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அவர்கள், ‘‘எங்களுக்கு நற்செய்தி அளித் தீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தர்மம்) கொடுங்கள்” என்று (இருமுறை) கூறி னார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (அவர் களிடமும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘யமன் வாசிகளே! (எனது) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக்கொள்ள வில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏற்றுக்கொண்டோம்” என்று பதில் கூறினர். பிறகு ‘‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது எனும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனது அரியணை தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தான்” என்று கூறினார்கள்.5 அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, ‘‘ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப்போய்விட்டது” என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காணமுடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! யிநான் அதை அப்படியே விட்டுவிட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே! (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)› என்று நான் ஆசைப்பட்டேன். அத்தியாயம் :

3

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே ஓரிடத்தில் (சொற்பொழிவு மேடைமீது) எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குத் தெரிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு ஈறாக) சொர்க்கவாசிகள் (சொர்க்கத் தில்) தாம் தங்குமிடங்களில் நுழையும் வரையும் நரகவாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் நுழையும்வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினை வில் வைத்துக்கொண்டார்; அதை மறந்த வர் மறந்துவிட்டார். அத்தியாயம் :

4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செய லாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதுதான் அவன் என்னை ஏசுவதாகும். யிநான் அவனை ஆரம்பமாகப் படைத்த தைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டுவர முடியாது’ என்று அவன் கூறுவதுதான் அவன் என்னை நம்ப மறுப்பதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

5

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தனது (யிலவ்ஹுல் மஹ்ஃபூழ்’ எனும்) பதிவேட்டில் லிஅது அரியணைக்கு மேலே அவனிடம் உள்ளதுலி ‘‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

6

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூசலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்துகொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக்கொள்வீராக! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யியார் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக்கொள்கி றாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி மறுமை நாளில்) மாலையாக மாட்டப்படும்’ எனக் கூறியுள் ளார்கள்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :

7

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: யார் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத் காரமாக) எடுத்துக்கொள்கிறாரோ அவர் மறுமை நாளில் ஏழு பூமிகள்வரை புதைந்து போகும்படிச் செய்யப்படுவார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8 அத்தியாயம் :

8

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. யிஆண்டு’ என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.9 இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

9

சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அர்வா’ என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறைவைத்துவிட்டதாகக் கருதி (மதீனா வின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) நான், ‘‘அவரது உரிமையில் எதையும் நான் குறை வைப்பேனா? யிஎவர் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தின் மேற்பகுதியிலிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மறுமை நாளில் மாலையாக மாட்டப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்” என்று சொன்னேன்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபிஸ்ஸினாத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :

10

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது இறை அரியணைக்குக் கீழே சிரவணக்கம் செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறை வனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒருநாள்) அது சிரவணக்கம் செய்ய, அந்த சிரவணக்கம் ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம்போலக்) கிழக்கிலிருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘‘வந்த வழியே திரும்பிவிடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று சொன்னார்கள்.14 ‘‘இதைத்தான், யிசூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்’ (36:38) எனும் இறைவசனம் குறிக்கின்றது” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

11

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு (ஒளியிழந்து)விடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

12

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான் றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.15 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

13

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் பிறப்புக் காகவும் அவற்றின் கிரகணம் ஏற்படுவ தில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்வை நினைவுகூருங்கள். இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

14

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் தொழு கைக்காக நின்று யிதக்பீர்’ கூறி நீண்ட நேரம் (குர்ஆனை) ஓதினார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி, ‘‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு” (தன்னைப் புகழ்ந்த வனின் புகழுரையை அல்லாஹ் செவியுற் றான்) என்று கூறினார்கள். அப்படியே நின்று நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார் கள். அது முதல் தடவை ஓதியதைவிடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். அது முதல் ருகூஐவிடச் சிறியதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் சஜ்தா செய்தார்கள். பிறகு அடுத்த ரக்அத்திலும் அவ்வாறே செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். அதற்குள் (கிரகணம் முடிந்து) சூரியன் வெளிப்பட்டுவிட்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்க ளுக்கு உரையாற்றினார்கள். (அவ்வுரையில்) சூரிய, சந்திர கிரகணங்களைப் பற்றி, ‘‘அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காக வும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் அவற்றைக் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்” என்று சொன்னார்கள்.16 அத்தியாயம் :

15

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காகவும் சூரியனிலும் சந்திரனிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆயினும், அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவற்றை நீங்கள் காணும்போது (இறைவனைத்) தொழுங்கள். இதை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

16

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘ஸபா’ என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள் ளேன்; யிஆத்’ சமூகத்தார் (யிதபூர்’ என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப் பட்டனர்.18 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

17

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார் கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர் களின் முகம் மாறிவிடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். ஆகவே, (ஒருமுறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டுவந்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆத் சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்துகொண்டு), ‘‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேக மாகும்” (46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக்கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம். எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

18

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் இறையில்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னி டம் கொண்டுவரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டது. பிறகு ‘ஸம்ஸம்’ நீரால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கை யாலும் நிரப்பப்பட்டது.20 மேலும், கோவேறுக் கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான யிபுராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் (அதில் ஏறி வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளித் தார். ‘‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘அவரை அழைத்து வருமாறு ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், ‘‘ஆம்” என்றார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்று சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘‘யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்க, ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘முஹம்மத் ‘‘ என்று பதிலளித்தார். ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈசா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், ‘‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வர வாகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற் குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. யிஜிப்ரீல்’ என்று பதிலளிக் கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட் டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத் தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற் குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஞீஜிப்ரீல்” என்று பதிலளித்தார். உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஞீஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. ‘‘ஆம்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். ‘‘அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம்..’ஞீயார் அது?” என்று கேட்கப் பட்டது. ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப் பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘யிமுஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப் பப்பட்டதா? அவரது வரவு நல்வரவாகட் டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். ‘‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், ‘‘இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்பவர்களைவிட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தாரிலிருந்து சொர்க்கம் செல்வார்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘‘யார் அது?” என்று வினவப்பட்டது. ‘‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. ‘‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘‘(அவரை அழைத்து வருமாறு) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப் பட்டது. நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன் னார்கள். பிறகு, ‘அல்பைத்துல் மஅமூர்’ எனும் (வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும்) இறையில்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘‘இதுதான் ‘அல்பைத்துல் மஅமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்” என்று சொன்னார். பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) யிசித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டுவந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) யிஹஜ்ர்’ எனுமிடத்தின் (தயாரிக்கப்படும்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப்போல் இருந்தன. அதன் வேர்ப் பகுதியில் நான்கு ஆறுகள் ஓடிக்கொண்டிருந்தன. (சல்சபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே ஓடிக்கொண்டிருந்தன; மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே ஓடின. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘‘உள்ளே இருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். பிறகு என்மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூசா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘‘என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், ‘‘என்மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ள”’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘எனக்கு மக்களைப் பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும். நான் இஸ்ரவேலர் களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள் ளேன். உங்கள் சமுதாயத்தார் (இதைத்) தாங்கமாட்டார்கள். ஆகவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று அவனி டம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்று சொன்னார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூசா (அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூசா (அலை) அவர்களி டம் சென்றேன். அவர்கள், ‘‘என்ன செய்தீர் கள்?” என்று கேட்க, ‘‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்” என்றேன். அதற்கு அவர்கள், ‘‘முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, ‘‘நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக்கொண்டுவிட்டேன்” என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), ‘‘நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை செயல்படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) எளிதாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்” என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது ‘அல்பைத்துல் மஅமூர்’ தொடர்பாக அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :

19

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது : உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார்.21 பிறகு அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டைபோல் கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துக் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப்பிண்டமாக மாறுகிறது.22 பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வான வருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக் கப்படுகின்றன. (அவை:) அதன் செயல்பாடு, வாழ்வாதாரம், வாழ்நாள், நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா என்று எழுதுமாறு அந்த வானவருக்குச் சொல்லப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால்தான், உங்களில் ஒருவர் (நற்)செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவுக்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்கு மிடையே ஒரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொண்டுவிடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்துவிடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்துவிடுவார்.) ஒருவர் (தீய) செயல் புரிந்துகொண்டே செல்வார். எந்த அளவுக்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரே யொரு முழம் (தொலைவு)தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக்கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசி களின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) அத்தியாயம் :

20

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஓர் அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீரும் அவரை நேசிப்பீராக!” என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண் ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று அறிவிப்பார் கள். உடனே, விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமி யிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

21

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் மேகத்தில் இறங்கி, விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். ஷைத்தான்கள் திருட்டுத்தனமாக (ஒளிந் திருந்து) அவற்றை ஒட்டுக்கேட்டு, சோதிடர்களுக்கு அவற்றை (உள்ளுதிப்பாக) அறிவித்துவிடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.23 இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

22

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடக் கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்துகொண்டு) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம், சொற்பொழிவு மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரது உபதேச) உரையைச் செவியுற்ற வண்ணம் வானவர்கள் (உள்ளே) வருவார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

23

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) அவர்களை நோக்கி ™மைதியாக இருக்குமாறு சைகை செய்தார்கள்.) அப்போது ஹஸ்ஸான் (ரலி) அவர்கள், ‘‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக்கொண்டிருந் தேன்” என்று கூறிவிட்டு, அபூஹுரைரா (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி, ‘‘அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடம் கேட்கிறேன்: (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவி களுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்குத் தூய ஆன்மா(வான வானவர் ஜிப்ரீல்) மூலம் துணை புரிவாயாக!› என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.25 அத்தியாயம் :

24

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கவிஞர் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், ‘‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக்கவி பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

25

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் கிளம்புகின்ற புழுதியை (இன்றும்) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மூசா பின் இஸ்மாயில் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(வானவர்) ஜிப்ரீல் அவர் களின் படைகள் கிளப்பிய’ என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.26 அத்தியாயம் :

26

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகிறது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்துக்கொண்ட நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று என் முன் தோன்றி காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்” என்று பதிலளித்தார்கள்.27 அத்தியாயம் :

27

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு ஜோடி (பொருட்களை) அல்லாஹ் வின் பாதையில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் யிஇன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பீர்கள் என்று நான் எதிர் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.28 அத்தியாயம் :

28

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘ஆயிஷாவே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்” என்று கூறினார்கள். நான், ‘‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு” (அவர்மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள்வளங் களும் பொழியட்டும்.) (அல்லாஹ்வின் தூதரே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கி றீர்கள்” என்று கூறினேன். ஆயிஷா (ரலி) அவர்கள் ‘நீங்கள்’ என்று நபி (ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார். அத்தியாயம் :

29

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘‘தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதைவிட அதிகமாக (அடிக்கடி) சந்திக்கமாட்டீர்களா?” என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள். அப்போது, ‘‘(நபியே!) நாம் உங்கள் இறைவனின் உத்தரவின்றி இறங்கு வதில்லை. எமக்கு முன்னிருப்பவையும் எமக்குப் பின்னால் இருப்பவையும் அவனுக்கே உரியவை” (19:64) எனும் இறைவசனம் அருளப்பட்டது.29 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

30

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி (வானவர்) ஜிப்ரீல் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகரித்துக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழிவழக்குகள் அளவுக்கு வந்து நின்றது.30 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அத்தியாயம் :

31

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தைவிட) அதிகமாக வாரி வழங்கு வார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள்.31 ஜிப்ரீல் (அலை) அவர்கள், அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது நபியவர்கள் (மழைக்)காற்றைவிட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ் வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் ‘‘எனக்கு குர்ஆன் முழுவதையும் (வானவர்) ஜிப்ரீல் ஓதிக் காட்டிவந்தார்” என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர். அத்தியாயம் :

32

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அஸ்ர் தொழுகையைச் சிறிது தாமதப்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (அஸ்ரை இதற்கு முந்திய நேரத்தில்) தொழுதார்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், ‘‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை அறிந்து சொல்லுங்கள், ‘‘உர்வா!” என்று சொன்னார்கள். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுவிக்க, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழு தேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்” என்று தம் விரல்களால் ஐந்து தொழுகை களை எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டதாக பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்” என்றார்கள்.32 அத்தியாயம் :

33

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாகக் கருதாமல் இறந்துவிடுபவர், சொர்க்கத்தில் நுழைவார் லிஅல்லது நரகம் செல்லமாட்டார்லி என்று (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!” என்று பதிலளித்தார்கள்.33 அத்தியாயம் :

34

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் ஒருவர்பின் ஒருவராக அடுத்தடுத்து வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகை யிலும் அஸ்ருடைய தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றார்கள். பிறகு, அல்லாஹ் லிஅவனோ மிகவும் அறிந்தவன்லி அவர்களிடம், ‘‘(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், ‘‘அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களி டம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப் பார்கள்.34 அத்தியாயம் :

35

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது நபி (ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரு கதவுகளுக்கிடையே நின்றுகொண்டார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத்தொடங்கியது. நான், ‘‘நாங்கள் என்ன (தவறு) செய்துவிட்டோம்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இந்தத் தலையணையின் நிலை என்ன?” என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், ‘‘இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக்கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘உருவப் படம் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்தவன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்’ என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.37 அத்தியாயம் :

36

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

37

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ(ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என என்னிடம் அபூதல்ஹா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அறிவிப்பாளர் புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒருமுறை) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர் களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர் களின் வீட்டில் ஒரு திரையைக் கண்டோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. ஆகவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல்கவ்லானீ அவர்களிடம், ‘‘இவர்கள் (ஸைத் (ரலி) அவர்கள்) நமக்கு உருவங் களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்க வில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம். ஆனால், ஸைத் (ரலி) அவர்கள் (அதை அறிவிக்கும்போது) யிதுணியில் பொறிக்கப்பட்டதைத் தவிர’ என்று (ஸைத் (ரலி) அவர்கள்) சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘கேட்கவில்லை” என்றேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; அவர்கள் அவ்வாறுதான் சொன்னார்கள்” என்று கூறினார்கள்.38 அத்தியாயம் :

38

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தாம் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். (ஆனால், வர வில்லை. நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்டபோது) ‘‘உருவப் படமுள்ள வீட்டி லும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர் களாகிய) நாங்கள் நுழைவதில்லை” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

39

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் (தொழுகையில்), ‘‘சமிஅல் லாஹு லிமன் ஹமிதஹு” (தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான்) என்று கூறும்போது நீங்கள், ‘‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து” (இறைவா, எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள். ஏனெனில், யாருடைய இந்த வார்த்தை வானவர்களின் வார்த் தைக்கு (நேரத்தில்) ஒத்து அமைகிறதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:39 அத்தியாயம் :

40

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும்வரை அவர் தொழுகை யிலேயே இருக்கிறார். அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும்வரை, அல்லது அவருக்கு துடக்கு ஏற்படாதிருக்கும்வரை வானவர்கள், ‘‘இறைவா! இவரை மன்னித்து, இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்கி றார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40 அத்தியாயம் :

41

யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமேல் (உரையாற்றியபோது) ‘‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரிடம்) யியா மாலிக்’ (மாலிக்கே!) என்று அழைப்பார்கள்” (43:77) எனும் வசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையில் (யியா மாலிக்’ என்பதற்குப் பதிலாக) யியா மாலி’ என்றுள்ளது” எனக் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :

42

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(தாங்கள் காயமடைந்த) உஹுத் நாளைவிடக் கடுமையானதொரு நாளைத் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன்.41 அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங் களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா’ (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.42 ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக்கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பிய படி எனக்குப் பதிலளிக்கவில்லை.43 ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப் பட்ட திசையில் நடந்தேன். யிகர்னுஸ் ஸஆலிப்’ எனுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என்மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘‘உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு முகமன் (சலாம்) கூறினார். பிறகு, ‘‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலும் உள்ள) இந்த இரு மலைகளை யும் அவர்கள்மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பி னாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார். அப்போது, ‘‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் வழித்தோன்றல் களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வழிபடுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)” என்று கூறிவிட்டேன். அத்தியாயம் :

43

அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், ‘‘(வேத அறிவிப்பு நின்றுபோயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களை நெருங்கிவர) அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது. பிறகு அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அல்லாஹ் அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார். (53: 9,10)” என்னும் இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என விளக்கி னார்கள்.44 அத்தியாயம் :

44

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது : ‘‘நிச்சயமாக, அவர் தம் இறைவனின் சான்றுகளில் பெரியதைக் கண்டார்” (53:18)எனும் இறைவசனத்தின் பொருள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீலை லி அடிவானத்தை அடைத்துக்கொண்ட ஒரு பச்சை விரிப்புமீது (அல்லது அவர் தமது இறக்கையை விரித்தபடி அதனால் அடி வானத்தை அடைத்துக் கொண்டு விரித்த படி நிற்கக்) கண்டார்கள்” என்பதாகும். அத்தியாயம் :

45

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்” என்று கூறுபவர் பெரிய தவறு புரிந்துவிட்டார்; எனினும், அவர்கள் (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை, அவர்களின் (சொந்த) உருவிலும் அமைப்பிலும் அடிவானத்திற்கு இடைப்பட்டதை அடைத்தபடி (தோற்ற மளிக்கக்) கண்டார்கள். அத்தியாயம் :

46

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அப்படியென்றால், யிபிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப்போல் அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது’ (53:8,9) எனும் இறைவசனம் எங்கே?” என்று கேட்டேன்.45 அதற்கு அவர்கள், ‘‘அது (குர்ஆனில் ‘அவர் நெருங்கி அருகே வந்தார்’ என்பதில் ‘அவர்’ என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால்தான் அவர் அடிவானத்தையே அடைத்துக்கொண்டார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

47

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) ‘‘அதோ, அங்கே நெருப்பை மூட்டிக்கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார். இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.46 அத்தியாயம் :

48

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதனால் அவள் மீது கோபம் கொண்டவராக அவர் இரவைக் கழித்தாரென்றால் அவளை, விடியும்வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

49

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘‘(வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முதன் முதலாக யிஹிரா’ குகையில் எனக்கு வேதஅறிவிப்பு கொண்டுவந்தார்.) பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வேதஅறிவிப்பு வருவது நின்று போய்விட்டது. (அந்தக் காலகட்டத்தில் ஒருமுறை) நான் (பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். அப்போது என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன். அங்கே யிஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (இருந்த பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாகிவிட்டேன். அதையடுத்து (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்துவிட்டேன். பிறகு, (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள்” என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப்பட்டது. அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘(போர்வை) போர்த்திக்கொண்டிருப்பவரே! எழுந்திருப்பீராக! பிறகு (அல்லாஹ்வின் தண்டனை குறித்து மக்களை) அச்சுறுத்தி எச்சரிப்பீராக! உம்முடைய இறைவனின் பெருமையை எடுத்துரைப்பீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கிவிடுவீராக!” எனும் (74:1லி5) வசனங் களை அருளினான். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.47 அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: இங்கு ‘அசுத்தம்’ (ருஜ்ஸ்) என்பது சிலைகளைக் குறிக்கும். அத்தியாயம் :

50

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில்48 மூசா (அலை) அவர்களை ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிற முடைய உயரமான, சுருள்முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிவப்பும் வெண்மையும் கலந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர் களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர் களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை. ‘‘நீர் அவரை (மூசாவை)ச் சந்தித்ததில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.” (32:23) இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ‘‘தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்களும் அபூபக்ரா (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.49 அத்தியாயம் :

51

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமை வாழ்வில்) அவரது இருப்பிடம் (எதுவென்று) காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். அதாவது அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கவாசிகளின் இருப்பிடமும், அவர் நரகவாசியாக இருந்தால், நரகவாசிகளின் இருப்பிடமும் (எடுத்துக் காட்டப்படும்) இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51 அத்தியாயம் :

52

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர் களாக ஏழைகளைக் கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களைக் கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

53

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது அவர்கள், ‘‘நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) என்னை சொர்க்கத் தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் ஓரத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்து கொண்டிருந்தாள். நான், ‘‘இந்த அரண் மனை யாருடையது?” என்று (வானவர் களிடம்) கேட்டேன். ‘‘உமர் பின் அல் கத்தாப் அவர்களுடையது” என்று பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் தன்மான உணர்வு நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டேன்” என்று கூறினார்கள்.52 இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமா நான் தன்மான உணர்வைக் காட்டுவேன்?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :

54

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கை யாளருக்குத் துணைவியர் இருப்பர். அவர் களை மற்றவர்கள் பார்க்க முடியாது.53 இதை (அபூமூசா) அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஅப்திஸ் ஸமத், ஹாரிஸ் பின் உபைத் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில் ‘அறுபது மைல்’ என வந்துள்ளது. அத்தியாயம் :

55

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறு கிறான். நீங்கள் விரும்பினால், யிமனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டி ருக்கும் கண்குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறியமாட்டார்கள்’ (32:17) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

56

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகின்ற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் ஒளிரும் (முழு) நிலவின் தோற்றத்தைப்போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் சளி துப்பவும்மாட்டார்கள்; மூக்குச் சிந்தவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங் கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலைவாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை யாய் இருக்கும். (அவர்கள் நறுமணப் புகையிடும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகூட (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வைக் காலையும் மாலையும் துதித்துக்கொண்டிருப்பர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

57

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதனின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே எந்த மனவேறுபாடும் இருக்காது; எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பார்கள். அவ்விருவரில் ஒவ்வொருவரின் காலின் எலும்பு மஜ்ஜைகூட (கால்) சதைக்கு அப்பாலிருந்து (பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டி ருப்பார்கள். அவர்கள் நோயுறமாட்டார்கள். அவர்கள் மூக்குச் சிந்தமாட்டார்கள்; சளி உமிழமாட்டார்கள்; அவர்களுடைய பாத்தி ரங்கள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை. அவர்களின் சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களின் தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: காலை (புக்ரத்) என்பது ஃபஜ்ரின் ஆரம்ப நேரத்தையும், மாலை (அஷிய்யு) என்பது சூரியன் உச்சி சாய்ந்தது முதல் மறையும் வரையிலான நேரத்தையும் குறிக்கும். அத்தியாயம் :

58

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் லிஅல்லது ஏழு லட்சம் பேர்லி (விசாரணையின்றி சொர்க்கத்தில்) நுழைவார்கள்: அவர்களில் கடைசி நபர் (சொர்க்கம்) நுழையாதவரை அவர்களில் முதல் நபர் (சொர்க்கம்) நுழையமாட்டார். அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவைப் போலிருக்கும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

59

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப் பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்துவந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந் தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘முஹம்மதின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் தோழர்) சஅத் பின் முஆதுக்கு சொர்க்கத் தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிட உயர்ந்தவை” என்று கூறினார்கள்.54 அத்தியாயம் :

60

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் பட்டுத் துணி ஒன்று கொண்டு வரப்பட்டது. மக்கள் அதன் அழகையும் மென்மையையும் பார்த்து வியப்படைய லானார்கள். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சஅத் பின் முஆத் அவர்களுக்குச் சொர்க்கத்தில் கிடைக்க விருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை” என்று கூறினார்கள். அத்தியாயம் :

61

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம் (கிடைப்பதானது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.55 இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

62

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப் பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்றுகொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது.56 இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

63

64

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின் தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர் கள், விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் யிஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரு துணைவியர் இருப்பார்கள். அவர்களுடைய கால்களின் எலும்பு மஜ்ஜைகள்கூட (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பால் வெளியே தெரியும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

65

பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (தம் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபொழுது, ‘‘பாலூட்டும் செவிலித்தாய் சொர்க்கத்தில் இவருக்குக் கிடைப்பாள்” என்று கூறினார்கள்.57 அத்தியாயம் :

66

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (தகுதியில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டுதான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார் கள் தங்குமிடங்கள்தானே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களே ஆவர்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :

67

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: சொர்க்கத்தில் எட்டு வாயில்கள் உள்ளன. அதில் யிரய்யான்’ எனப்படும் வாயில் ஒன்று உள்ளது. அதில் நோன்பாளி களைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61 அத்தியாயம் :

68

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (தொழுகை அறிவிப்புச் செய்ய பிலால் (ரலி) அவர்கள் முனைந்தபோது) ‘‘வெப்பம் தணியட்டும்” என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘‘வெப்பம் தணியட்டும்” என்று லி சிறு குன்றுகளின் நிழல் நீண்டு விழும்வரை லி கூறினார்கள். பிறகு ‘‘தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது” என்று சொன்னார்கள்.63 அத்தியாயம் :

69

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது.64 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

70

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகம் தன் இறைவனிடம், ‘‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே” என்று முறை யிட்டது. ஆகவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதான் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும்.65 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

71

அபூஜம்ரா அள்ளுபயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒருமுறை) எனக்குக் காய்ச்சல் கண்டது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: ‘ஸம்ஸம்’ தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக்கொள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால்தான் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக்கொள்ளுங்கள் லி(அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் கூறு கிறார்கள்:)லி அல்லது ஸம்ஸம் தண் ணீரைக் கொண்டு தணித்துக்கொள் ளுங்கள்” என்று கூறினார்கள்.66 அத்தியாயம் :

72

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் உங்களைவிட்டுத் தணித்துக்கொள்ளுங்கள். இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அத்தியாயம் :

73

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அத்தியாயம் :

74

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீ ரால் தணித்துக்கொள்ளுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

75

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யிஉங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமே யாகும்” என்று கூறினார்கள். அப்போது ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியல்ல.) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்று சொன்னார்கள்.67 அத்தியாயம் :

76

யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டு, ‘‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) யியா மாலிக்’ (யிமாலிக்கே!›) என்று அழைப்பார்கள்” (43:77) எனும் இறைவசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன்.68 அத்தியாயம் :

77

அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமான வர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது.69 அதற்கு அவர்கள், ‘‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர (வேறெதுவும்) அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்ப வில்லை.70 மேலும், ஒரு மனிதர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?” என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டேன் என்றார்கள்: மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப்போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, ‘‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின்போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்ய வில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்துவந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்” என்று கூறுவார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

78

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவுக்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்ததைப் போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒருநாள், அவர்கள் பிரார்த்தனை செய்தவண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: ‘‘என்(மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), ‘‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?” என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?” என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘‘லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்)” என்று பதிலளித்தார். ‘‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?” என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, ‘‘சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘‘அது எங்கே இருக்கிறது?” என்று கேட்க, ‘‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) யிதர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார். (இதைச் சொல்லி முடித்த)பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், ‘‘அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ள”’ என்று கூறினார்கள். நான், ‘‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.72 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

79

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய் வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ தூங்கிக்கொண்டேயிரு” என்று போதித்து (அவரை விழிக்க விடாமல் உறங்க வைத்து)விடுகின்றான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகின்றது. அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.73 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

80

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும்வரை (தொழுகைக்கு எழுந்திருக் காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அந்த மனிதரின் இரு காதுகளிலும் லிஅல்லது அவரது காதில்லி ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித் தார்கள்.74 அத்தியாயம் :

81

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, ‘‘பிஸ்மில்லாஹ்; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான; வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸ்க்த்தனா” (அல்லாஹ்வின் திருப்பெயரால்; இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகி யிருக்கச்செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகி யிருக்கச்செய்) என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப் பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்யமாட்டான். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75 அத்தியாயம் :

82

83

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நீங்கள் தொழுதுகொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக்கொள்ள) மறுத் தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன்தான் ஷைத்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.77 அத்தியாயம் :

84

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானின் ஸகாத் பொருளைப் பாதுகாத்தி டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே நான் அவனைப் பிடித்துக்கொண்டேன்; ‘‘உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்...) இறுதியில் அவன், ‘‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது யிஆயத்துல் குர்ஸீ’யை (2:255) ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டே இருப்பார். காலை நேரம் வரும்வரை ஷைத்தான் உங்களை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) ‘‘அவன் பொய்யனாயிருந்தும், உம்மிடம் உண்மையே பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான்” என்று கூறினார்கள்.78 அத்தியாயம் :

85

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, ‘‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘‘உன் இறை வனைப் படைத்தவர் யார்?” என்று கேட் பான். இந்தக் கட்டத்தை அவன் அடையும் போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்! (இத்தகைய சிந்தனை’லிருந்து) விலகிக்கொள்ளட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

86

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன; ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.79 அத்தியாயம் :

87

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் தம் பணியாள ரிடம் ‘‘நமது சிற்றுண்டியைக் கொண்டுவா” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘‘பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியிருந்தபோது நான் மீனை மறந்தே போய்விட்டேன். அதை ஷைத்தான்தான் எனக்கு மறக்கச் செய்து விட்டான்” (18:62,63) என்று கூறினார். அல்லாஹ் கட்டளையிட்ட (இரு நதிகள் சங்கமிக்கும்) இடத்தைக் கடக்கின்ற வரை மூசா (அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.80 இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

88

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை காட்டியபடி, ‘‘குழப்பம் இங்குதான். குழப்பம் இங்குதான். ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து... (அது தோன்றும்)” என்று கூறினார்கள்.81 அத்தியாயம் :

89

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள்.82 மேலும், (இரவில்) உன் கதவை மூடிவிடுவீராக! (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! (உறங்கச் செல்கை யில்) உமது விளக்கை அணைத்து விடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக!. உமது தண்ணீர் பையைச் சுருக்கிட்டு மூடிவிடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! உமது பாத்திரத்தை மூடி வைப்பீராக! (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன்மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுவீராக! (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வீராக! இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.83 அத்தியாயம் :

90

ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டுத் திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னை வழியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். லிஉசாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்ததுலி (என அறிவிப் பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரி களில் இருவர் அந்த வழியாகச் சென்றார் கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார் கள்.84 அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயைதான்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன் னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டுவிடுவான் லிஅல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையேனும் போட்டுவிடு வான்லி என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள்.85 அத்தியாயம் :

91

சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்துவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், யிஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற் பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், யிஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.86 அத்தியாயம் :

92

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் (உடலுறவு கொள்ளச்) செல்லும்போது ‘‘(அல்லாஹும்ம!) ஜன்னிப்னிஷ் ஷைத் தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸ்க்த்தனீ” (பொருள்: இறைவா! ஷைத்தானை என்னிடமிருந்து விலகி யிருக்கச்செய். எனக்கு நீ அளிக்கின்ற குழந்தைகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச்செய்) என்று பிரார்த்தித்து, அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்கு மாயின், அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. மேலும், அதன் மீது ஷைத்தானுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.87 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

93

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். பிறகு, ‘‘ஷைத்தான் எனக்கு முன்னால் வந்து என் தொழுகை யைத் துண்டிக்கக் கடுமையாக முயன்றான். ஆனால், அவனை நான் வெற்றி கொள் ளும்படி அல்லாஹ் செய்துவிட்டான்” என்று கூறினார்கள். தொடர்ந்து முழு ஹதீஸையும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.88 அத்தியாயம் :

94

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் சத்தத் துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடிவிடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு யிஇகாமத்’ சொல்லப்பட்டால் திரும்பி ஓடி விடுகிறான். யிஇகாமத்’ சொல்லி முடித்த தும் திரும்பிவருகிறான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, ‘‘இப்படி இப்படியெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுகிறான். (அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தெரியாமல் போய்விடுகிறது. மூன்று ரக்அத்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால், அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.89 அத்தியாயம் :

95

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொரு வனும் பிறக்கும்போது, அவனது இரு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈசாவைத் தவிர. (அவர் பிறந்த போது அவரை விலாப் பக்கம்) குத்தச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றி யிருந்த மெல்லிய சவ்வைத்தான் குத்தி னான். (அதுதான் அவனால் முடிந்தது.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

96

அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், ‘‘அபுத் தர்தா (ரலி) அவர்கள் (இங்கு) வந்து, ‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களின் நாவால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கின்றாரா?› என்று கேட்டார்” எனச் சொன்னார்கள். முஃகீரா பின் மிக்ஸம் (ரஹ்) அவர்கள், ‘‘அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களின் நாவால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்” என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் குறிப்பிட்டது அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களைத் தான்” என்று கூறினார்கள்.90 அத்தியாயம் :

97

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் மேகங்களுக்கிடையே (சஞ்சரித்த வண்ணம்) பூமியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசிக்கொள்கிறார்கள். அப்போது ஷைத்தான்கள் (வானவர்களுடைய) வாக்கை (ஒட்டுக்) கேட்கின்றன. பின்னர், (பாட்டிலைக் கவிழ்த்து தோல் பையின் வாயில் வைத்து நீரை ஊற்றும்போது) பாட்டில் (அதில்) பொருத்தப்படுவதைப் போன்று சோதிடனின் காதில் தமது வாயை வைத்து (தாம் ஒட்டுக்கேட்டவற்றை இரகசியமாக)க் கூறிவிடுகின்றனர். (இனி நடைபெறவிருக்கும் ஒரு விஷயத்தை சோதிடர்கள் தெரிந்துகொண்டு) அதனுடன் நூறு பொய்களை (புனைந்து) சேர்த்துவிடு கின்றார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91 அத்தியாயம் :

98

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது தம்மால் முடிந்தவரை அவர் அதைக் கட்டுப் படுத்திக்கொள்ளட்டும். ஏனெனில், யாரேனும் யிஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.92 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

99

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நடந்தபோது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். உடனே இப்லீஸ், ‘‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்” என்று கத்தினான். முஸ்லிம் களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.93 அப்போது அங்கு (தமக்கருகேயிருந்த) தம் தந்தை யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, ‘‘அல்லாஹ்வின் அடியார் களே! இவர் என் தந்தை! இவர் என் தந்தை!” என்று (உரக்கக்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அவரை விட்டுவைக்கவில்லை. இறுதியில் அவரை (தாக்கி)க் கொன்று விட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.94 ‘‘ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் இறக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.95 அத்தியாயம் :

100

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழு கையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அ(வ்வாறு செய்வ)து உங்களின் தொழு கையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும்” என்று பதிலளித் தார்கள்.96 அத்தியாயம் :

101

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: நல்ல கனவு, அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவு, ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ் விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாது காப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கி ழைக்காது. இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

102

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார், ‘‘லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்” (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன். அவனுக்கு இணை(துணை) கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்) என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(ன நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரைவிட்டு (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். அவருடைய அந்த நாளில் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிடமிருந்து (பாது காக்கும்) அரணாக அது அவருக் கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற் செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தால் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

103

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுவதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச்செய்வானாக” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னி டம் இயல்பாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டார் களே” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்பெண்கள் அஞ்சுவதற்குத் தாங்களே அதிகத் தகுதி யுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘‘தமக்குத்தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். அதற்கு அந்தப் பெண்கள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடைய வராகவும் அதிகமாகக் கடுமை காட்டுப வராகவும் இருக்கிறீர்கள்” என்று பதிலளித் தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டி ருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.97 அத்தியாயம் :

104

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் இரவில் தங்குகிறான்.98 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

105

அப்துல்லாஹ் அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘ஆட்டையும் பாலைவனத்தை யும் விரும்புபவராக உங்களை நான் காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, அல்லது பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அறிவிப்புச் செய்தால், உங்கள் குரலை உயர்த்தி அறிவியுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள் களும் அதைக் கேட்டு அ(றிவிப்புச் செய்த)வருக்காக மறுமை நாளில் சாட்சி யம் சொல்கின்ற”’ என்று கூறிவிட்டு, ‘‘இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்” என்று சொன்னார்கள்.100 அத்தியாயம் :

106

107

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ...அப்போது (நான் பாம்பைக் கொல்ல அதை விரட்டிச் சென்றபோது) என்னை அபூலுபாபா (ரலி) அவர்களும் ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் பார்த்தார்கள்.102 இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

108

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு (முஸ்லிமான) மனிதரின் செல்வங் களிலேயே ஆடுதான் சிறந்த செல்வமாக இருக்கும் நிலை தோன்றக்கூடும். அவர் குழப்பங்களிலிருந்து தமது மார்க்க (விசுவாச)த்தைக் காக்க அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு மலைகளின் உச்சிக்கும் மழை பொழியும் (கணவாய், பள்ளத்தாக்கு போன்ற) இடங்களுக்கும் சென்று விடுவார். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103 அத்தியாயம் :

109

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (அக்னி ஆராதனை யாளர்களான மஜூசிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பாலைவனவாசிகளான ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன. ஆடுகளின் உரிமை யாளர்களிடம் அமைதி(யும் பணிவும்) காணப்படுகின்றது.104 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

110

உக்பா பின் அம்ர் அபீ மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி, ‘‘இறைநம்பிக்கை, இதோ இங்கேயிருக்கும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.105 அறிந்துகொள்ளுங்கள். கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங் களின் வால்களைப் பிடித்தபடி அவற்றை அதட்டிக்கொண்டே (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலை தூக்கும்.) (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்106 அத்தியாயம் :

111

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத் தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கிறன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால் தான் கத்துகிறது.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

112

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் லிஅல்லது நீங்கள் அந்திப் பொழுதை அடைந்தால்லி உங்கள் குழந்தை களை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் மூடிவிடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்கமாட்டான். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்’ எனும் வாக்கியம் இடம்பெறவில்லை.107 அத்தியாயம் :

113

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இஸ்ரவேலர்களில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமல் போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடித்துவிடுகின்றனவே!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.108 இதை நான் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?” என்று வினவினார்கள். நான், ‘‘ஆம் (கேட்டேன்)” என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதேபோலக் கேட்டார்கள். ‘‘நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)” என்று நான் கேட்டேன். அத்தியாயம் :

114

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘பல்லி தீங்கிழைக் கக்கூடியது (அல்ஃபுவைசிக்)” என்று சொன்னார்கள். ஆனால், அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை. நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டதாக சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கருதிக்கொண்டிருக் கிறார்கள்.109 அத்தியாயம் :

115

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லுமாறு தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அத்தியாயம் :

116

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதுகில் இரண்டு வெள்ளைக் கோடு கள் உள்ள (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்.110 இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

117

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குட்டைவால் பாம்பைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். மேலும், ‘‘அது கண் பார்வையைப் பறித்துவிடும்; கருவைச் சிதைத்துவிடும்” என்று கூறினார்கள்.111 அத்தியாயம் :

118

119

120

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங் கள் புனித (ஹரம்) எல்லையிலும் கொல்லப்படும். அவையாவன: எலி, தேள், பருந்து, (நீர்க்) காகம், வெறி நாய். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.114 அத்தியாயம் :

121

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து வகை உயிரினங்கள் உள்ளன. அவற்றை (ஹஜ் அல்லது உம்ராவுக்காக) யிஇஹ்ராம்’ கட்டிய ஒருவர் கொன்றுவிட் டாலும் அவர்மீது குற்றமேதும் இல்லை. தேள், எலி, வெறிநாய், (நீர்க்) காகம், பருந்து ஆகியவைதான் அவை. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.115 அத்தியாயம் :

122

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: பாத்திரங்களை மூடிவையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்துவையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். மாலையில் உங்கள் குழந்தை களை (வெளியே செல்ல விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவிச் செல்வதும் (பொருள்களையும் குழந்தைகளையும்) பறிப்பதும் நடக்கும். தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கி ழைக்கக்கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச்சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக் கூடும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்து. அவற்றில் சிலவற்றில் (யிஜின்கள்’ என்பதற்குப் பதிலாக) யிஷைத்தான்கள்’ என இடம்பெற் றுள்ளது. அத்தியாயம் :

123

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, யிவல்முர்சலாத்தி உர்ஃபன்’ (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படு கின்றவைமீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன் தீங்கி லிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப் பட்டுவிட்டது” என்று சொன்னார்கள்.117 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘‘அதை நாங்கள் அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்” என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

124

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு பெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவு மில்லை; பூமியிலுள்ள புழுபூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை (அவிழ்த்து)விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.118 அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழி யாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :

125

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தர விட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தர விட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘‘உங்களைக் கடித்தது ஒரேயோர் எறும்பல் லவா? (அதற்காக ஓர் எறும்புக் கூட்டத் தையே எரிக்கலாமா?)” என்று யிவஹீ’ அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.119 அத்தியாயம் :

126

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன் றில் நிவாரணமும் இருக்கிறது.120 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

127

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தனது நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முகத்திரையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். (ஆகவே, அது பிழைத்துக் கொண்டது.) ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையின் காரணத்தால் அவளுக்கு (பாவ)மன்னிப்பு வழங்கப் பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

128

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.121 இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

129

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொல்லை தரும்) நாய்களைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :

130

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நாய் வைத்திருக்கிறாரோ அவரது நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு யிகீராத்’ அளவு குறைந்துவிடுகிறது; விவசாயப் பண்ணை யைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடை களைப் பாதுகாக்கும் நாயையும் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.122 அத்தியாயம் :

131

சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஷனூஆ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் எவர் (தேவையின்றி) நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல் களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ (கணிசமான) அளவுக் குக் குறைந்துவிடும்’ என்று கூறுவதை நான் கேட்டேன்” என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; இந்த கிப்லா (இறையில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!” என்று பதிலளித்தார்கள்.123 அத்தியாயம் :