அனைத்து இஸ்லாம் நூலகம்

96 - The Clot - Al-`Alaq

:1

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

:2

'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

:3

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

:4

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

:5

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

:6

எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

:7

அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,

:8

நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.

:9

தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?

:10

ஓர் அடியாரை - அவர் தொழும்போது,

:11

நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,

:12

அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,

:13

அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,

:14

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

:15

அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

:16

தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,

:17

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

:18

நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.

:19

(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.