1
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?
2
மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.
3
அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.
4
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
5
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
6
நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.
7
எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.
8
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.