அனைத்து இஸ்லாம் நூலகம்

80 - He Frowned - `Abasa

:1

அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

:2

அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

:3

(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

:4

அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.

:5

(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

:6

நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

:7

ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

:8

ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

:9

அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

:10

அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

:11

அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

:12

எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

:13

(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

:14

உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

:15

(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

:16

(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

:17

(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

:18

எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

:19

(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

:20

பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

:21

பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.

:22

பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

:23

(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

:24

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

:25

நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

:26

பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

:27

பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

:28

திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

:29

ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

:30

அடர்ந்த தோட்டங்களையும்,

:31

பழங்களையும், தீவனங்களையும்-

:32

(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

:33

ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

:34

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

:35

தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

:36

தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

:37

அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

:38

அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

:39

சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

:40

ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

:41

அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

:42

அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.