1
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
2
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
3
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
4
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
5
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.