அனைத்து இஸ்லாம் நூலகம்

6 - மாதவிடாய்

1

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்தில் நாங்கள் இருந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்), அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு எழுதிவிட்ட விதி யாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தை யும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின்போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள். அத்தியாயம் :

2

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவேன். அத்தியாயம் :

3

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்குப் பணிவிடை செய்யலாமா? அல்லது பெருந்துடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “இதுவெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் இயல்பான விஷயம்தான். (மாதவிடாய் அல்லது பெருந்துடக்கு ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்குப் பணிவிடை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர்மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில்(கூட) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிட்டுள்ளார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் ‘இஃதிகாஃப்’ இருந்துகொண்டிருந்தார்கள். (பள்ளிவாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையி-ருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையி-ருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர் களுக்குத் தலைவாரி விடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

4

நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதுவார்கள். அத்தியாயம் :

5

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன், கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற் பட்டுவிட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். “உனக்கு மாதவிடாய் (நிஃபாஸ்) ஏற்பட்டுவிட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கறுப்புப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். அத்தியாயம் :

6

7

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள போது, அவரை அணைத்துக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினால், மாதவிடாய் (இரத்தம் கொட்டும்) ஆரம்ப வேளையில் கீழாடையை அணிந்துகொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். பின்னர் அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

8

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரை -அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது- அணைத்துக்கொள்ள விரும்பினால், கீழாடையைக் கட்டிக்கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

9

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது ‘நோன்புப் பெருநாள்’ அன்று தொழுகைத் திடலுக்கு (‘முஸல்லா’) புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட (கவர்ச்சியால்) மழுங்கவைப்பவர்களாகவும் (பெண்களாகிய) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள், “மார்க்கத் திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண் களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத் தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறை பாடாகும்” என்று கூறினார்கள் அத்தியாயம் :

10

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (‘விடைபெறும்’) ஹஜ் செய்யும் எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவி-ருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்துக்கு நாங்கள் வந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இந்நிலை யில் நான் அழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். நான், “இந்த ஆண்டு அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் ஹஜ் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்” என்றேன். “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இது ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட ஒன்றாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நீயும் நிறைவேற்றிக்கொள். ஆயினும், தூய்மை யாகும்வரை இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள் அத்தியாயம் :

11

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! (நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் பெண் ஆவேன்; தொடர்ந்து எனக்கு உதிரப் போக்கு ஏற்பட்டுக்கொண்டிருப்பதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இல்லை; தொழுகையை விட்டுவிடாதே. ஏனெனில்,) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; மாத விடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு. (உனக்குரிய) மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுதுகொள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

12

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு பெண்ணின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் (சிறிது சிறிதாகத்) தண்ணீர் தெளித்து(க் கழுவி)க்கொள்ளட்டும்! பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

13

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது, அவர் தமது ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்ய நினைத்தால், ஆடையி-ருந்து (காய்ந்துவிட்ட) இரத்தத்தைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவுவார். பின்னர் (மன நிம்மதிக்காக) ஆடை யின் மற்ற பகுதிகளிலும் தண்ணீர் தெளித்து, அந்த ஆடையுடன் (மாத விடாய் குளியலுக்குப்பின்) தொழுது கொள்வார். அத்தியாயம் :

14

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவியரில் ஒருவர் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அவர் உயர் இரத்தப்போக்கி னால் இரத்தத்தைக் காண்பவராயிருந்தார். இந்நிலையில் சில சமயங்களில் இரத்தத் தின் காரணமாகத் தமக்குக் கீழே கையலம்பும் பாத்திரத்தை அவர் வைப்பார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான கா-த் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஆயிஷா (ரலி) அவர்கள் (ஒரு முறை) குசும்பப் பூவின் (சாய) நீரைப் பார்த்துவிட்டு, “இ(தன் நிறமான)து இன்னவளுக்கு ஏற்படுகின்ற ஒன்றைப் போன்றதுதான்” என்று குறிப்பிட்டதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

15

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய துணைவியரில் ஒருவர் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அப்போது அவர் குசும்பப் பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும்போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும். அத்தியாயம் :

16

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளர்களின் அன்னை யரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர் உயர் இரத்தப்போக்கு உடையவ ராய் இருக்கும் நிலையில் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அத்தியாயம் :

17

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் சிலருக்கு ஒரேயோர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவருக்கு மாதவிடாய் ஏற்படும். இரத்தம் ஏதேனும் அந்த ஆடையில் பட்டு(க் காய்ந்து)விட்டால், தமது உமிழ் நீரைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தமது நகத்தால் சுரண்டிவிடுவார். அத்தியாயம் :

18

உம்மு அத்திய்யா நுசைபா பின்த் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென (பெண்களாகிய) நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ, சாயமிட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால், நெய்வதற்குமுன் நூ-ல் சாயமிடப்பட்ட (‘அஸ்ப்’ எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.) எங்களில் ஒரு பெண் குளித்து மாதவிடாயி-ருந்து தூய்மையடையும் போது, ‘ளிஃபார்’ நகரத்து (யமன்) ‘குஸ்த்’ (ஜாதிக் கோஷ்டக்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், நாங்கள் ‘ஜனாஸா’வைத் தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டி ருந்தோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

19

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயி-ருந்து (தூய்மை அடைய) எவ்வாறு குளிக்க வேண்டுமென்பது குறித்துக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், குளிக்கும் முறையைக் கூறினார்கள். “கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து, அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்து) தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித்தார்கள். அந்தப் பெண்மணி, “அதனால் நான் எவ்வாறு தூய்மைப்படுத்த வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்” என்று (மட்டும்) சொன்னார்கள். அப்பெண்மணி மீண்டும் “எவ்வாறு (தூய்மைப்படுத்த வேண்டும்)?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்ட வாறு) ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக்கொள் என்று பதிலளித்தார்கள். (நபியவர்கள் என்ன சொல்லவருகி றார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு) அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து, “இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக” என்று கூறினேன். அத்தியாயம் :

20

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிப் பெண்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “மாதவிடாயி -ருந்து (தூய்மையாகிக்கொள்ள) நான் எவ்வாறு குளிக்க வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து, ‘மூன்று முறை சுத்தம் செய்’ என்றோ அல்லது ‘அதன் மூலம் சுத்தம் செய்’ என்றோ சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து, நபி (ஸல்) அவர்கள் சொல்ல வருவதை அவருக்கு விளக்கிச் சொன்னேன். அத்தியாயம் :

21

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ‘இஹ்ராம்’ கட்டினேன். அப்போது நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராத ‘தமத்துஉ’ வகை இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. ‘அரஃபா’வுடைய இரவு (துல்ஹஜ் எட்டாம் நாள் பின்னேரம்) வரும்வரை நான் தூய்மையாகவில்லை. (மாதவிடாயி-ருந்து நீங்கிய அந்த இரவு) நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இது ‘அரஃபா’ வுடைய இரவு; நான் ‘உம்ரா’ செய்துவிட்டுத் திரும்பி, ‘இஹ்ராம்’ கட்டி ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன். (ஆனால், என்னால் உம்ரா செய்ய முடியாமல் போய்விட்டது)” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக்கொள். உம்ரா செய்வதை நிறுத்திவிடு (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!)” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை நான் செய்து முடித்தபோது (மதீனா செல்லும் வழியில்) முஹஸ்ஸப்’ (எனுமிடத்தில் நாங்கள்) இரவில் (தங்கியிருந்தபோது என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘தன்ஈம்’ எனும் இடத்தி-ருந்து (இஹ்ராம் கட்டி) புறப்பட்டுச் சென்று என்னை உம்ரா செய்விக்குமாறு பணித்தார்கள். இந்த உம்ரா (மாதவிடாயினால் செய்ய முடியாமற்போன) அந்த உம்ராவுக்குப் பதிலாக அமைந்தது. அத்தியாயம் :

22

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: துல்ஹஜ் மாதப் பிறை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் (மதீனாவி-ருந்து) நாங்கள் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள்ளலாம். ஏனெனில், குர்பானிப் பிராணியை நான் கொண்டுவராமல் இருந்திருந்தால் கட்டாயம் நானும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருப்பேன்” என்று கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர். நான் உம்ரா விற்காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (எனவே, என்னால் முத-ல் எண்ணி யிருந்த உம்ராவைச் செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு; உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக்கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன். ‘அல்ஹஸ்பா’ (முஹஸ்ஸப்) எனும் இடத்தில் நாங்கள் தங்கியிருந்த இரவில் (உம்ரா செய்வதற்காக) என்னுடன் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். (அவருடன்) நான் ‘தன்ஈம்’ என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, விட்டுப்போன எனது உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் கட்டினேன். ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மூவகை இஹ்ராம் முறைகளான தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய) இந்த முறைகள் எதிலும் (பரிகாரமாக) குர்பானி கொடுப்பதோ நோன்பு நோற்பதோ தானதர்மங்கள் செய்வதோ இருக்க வில்லை.6 அத்தியாயம் :

23

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பெண்ணின்) கருப்பைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான். (அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும்போது) அந்த வானவர், “என் இறைவா! (இது ஒரு துளி) விந்து. என் இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. என் இறைவா! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத்துண்டு” என்று கூறிக்கொண்டிருப்பார். அதை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும்போது அவ்வானவர், “என் இறைவா! (இது) ஆணா, அல்லது பெண்ணா? நற்பேறற்றதா? நற்பேறு உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ் வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போதே எழுதப்படும். இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

24

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் சென் றோம். எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்களில்) யார் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் (உம்ராவின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமி-ருந்து விலகிக்கொள்ளலாம். யார் தம்முடன் குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்து இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது குர்பானிப் பிராணியை அறுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை தமது இஹ்ராமி-ருந்து விலக வேண்டாம். (உங்களில்) யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறைவு செய்யட்டும்” என்று சொன்னார்கள். (இந்நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும்வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது) எனது தலைமுடியை அவிழ்த்து தலை வாரிக் கொள்ளும்படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளு மாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நிறைவுசெய்தேன். பின்னர் என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி ‘தன்ஈம்’ எனும் இடத்தி-ருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ரா வுக்காக உம்ரா செய்துகொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள். அத்தியாயம் :

25

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவராக இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது, “இது இரத்தக் குழா(யி-ருந்து வெளிவருவதே)யாகும்; மாத விடாயன்று. எனவே, மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் அங்கத் தூய்மை செய்து) தொழுதுகொள்” என்றார்கள். அத்தியாயம் :

26

முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “பெண்களாகிய நாங்கள் மாதவிடாயி-ருந்து தூய்மையானதற்குப் பின்புள்ள தொழுகைகளைத் தொழுதால் போதுமா? (அல்லது மாதவிடாய்க் காலத்தில் விடுபட்ட தொழுகைகளையும் தொழ வேண்டுமா?) என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “நீ (காரிஜிய்யா கூட்டத்தாரின் பிறப்பிடமான ‘கூஃபா’ நகருக்கு அருகிலுள்ள) ‘ஹரூரா’ எனும் இடத்தைச் சேர்ந்தவளா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது விடுபட்ட தொழுகைகளைத் தொழுமாறு ‘எங்களை நபி (ஸல்) அவர்கள் பணிக்கமாட்டார்கள்’ அல்லது ‘அத்தொழுகைகளை நாங்கள் தொழமாட்டோம்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :

27

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் அதிலிருந்து மெல்ல நழுவி(ச் சென்று), மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுத்து அணிந்துகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை அழைத்து, அந்தப் போர்வைக்குள் என்னை நுழைத்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடு வார்கள். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் அள்ளி) பெருந்துடக்கின் குளியலை நிறைவேற்றுவோம். அத்தியாயம் :

28

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே (அதிலிருந்து) நழுவி(ச் சென்று), மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தமக் கருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். அத்தியாயம் :

29

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இரு பெருநாட்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டுவரக் கூடாதென எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக்கொண்டிருந்தோம். இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ர-) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். -என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா-ர-) அவர்களின் கணவர் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்டார். இதில் என் சகோதரி ஆறு போர்களில் தம் கணவரோடு இருந்தார்.- என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் (நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில்) காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்துக்கொள்வோம். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எங்களில் ஒரு பெண்ணுக்குத் துப்பட்டா இல்லா விட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஒரு பெண்ணிடம் துப்பட்டா இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தன் துப்பட்டா ஒன்றை அவளுக்கு அணியக்கொடுக் கட்டும்! அவள் நன்மையான காரியங் களிலும் முஸ்லிம்களின் பிரார்த்தனை களிலும் கலந்துகொள்ளட்டும்!” என்று சொன்னார்கள். ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தபோது, “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் “என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். (நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்)” என்று சொன்னார்கள். -உம்மு அத்திய்யா, நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் “நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்” என்பதையும் சேர்த்தே கூறுவார். நபி (ஸல்) அவர்கள், “இளம் பெண்களும் திரைக்குள்ளிருக்கும் பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரார்த்தனைகளிலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்திலிருந்து ஒதுங்கி இருப்பார்கள்” என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா. (இதை அறிவித்த உம்மு அத்திய்யா (ரலி) அவர்களிடம்) நான், “மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், “மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்த-ஃபா போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். அத்தியாயம் :

30

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவளாக இருக்கிறேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் தூய்மை அடைவதில்லை. எனவே, நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை (தொழுகையை விட்டுவிடாதே. உனக்கு ஏற்பட்டுள்ள) இது, இரத்தக் குழா(யி-ருந்து வருவதே)யாகும், (மாதவிடாயன்று). ஆயினும், (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவுக்குத் தொழுகையை விட்டுவிடு. பிறகு குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் ‘உளூ’ செய்து) தொழுதுகொள்” என்றார்கள். அத்தியாயம் :

31

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மாதவிடாய் அல்லாத நாட்களில் வெளிப்படும்) மஞ்சள் நிற நீர்மத்ûயும் கலங்கல் நிற நீர்மத்தையும் நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) மாதவிடா யாகக் கருதியதில்லை. அத்தியாயம் :

32

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) இருந்தது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளித்து (விட்டுத் தொழுது)கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரோ ஒவ்வொரு தொழுகைகளுக்கும் குளித்துவந்தார். பிறகு “இது இரத்த நாள நோயாகும் (மாதவிடாயன்று)” என்று நபியவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

33

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜின்போது) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் நம்மை (ஊருக்குச்) செல்ல விடாமல் தடுத்துவிடுவார் போ-ருக்கிறதே!” என்று கூறிவிட்டு “அவர் உங்களுடன் ‘தவாஃப் (அல்இஃபாளா)’ செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அங்கிருந்தோர், “ஆம் (தவாஃப் செய்தார்)” என்று பதிலளித்தார் கள். “அப்படியானால் புறப்படு! (போகலாம்)” என்றார்கள். அத்தியாயம் :

34

35

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (உயர் இரத்தப்போக்கு ஏற்பட்டுவந்த ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்களிடம்), “மாதவிடாய் ஏற்படும்போது, தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைக் கழுவிவிட்டு (அங்கத் தூய்மை செய்து) தொழுதுகொள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

36

சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மகப்பேறு இரத்தப்போக்கால் ஒரு பெண் இறந்துவிட்டார். அவருக்காக நபி (ஸல்) அவர்கள் இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுவித்தார்கள். அப்போது நபியவர்கள் பிரேதத்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அத்தியாயம் :

37

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு நான் தொழாமல் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் இடத்திற்கு அருகில் படுத்திருப்பேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கீற்றினால் வேயப் பட்ட) தமது தொழுகை விரிப்பில் தொழுது கொண்டிருப்பார்கள். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது, அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என்மீது படும். இதை அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள், தம் தாயின் சகோதரியான மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :