43 - கடன்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘ஆம் (விற்றுவிடுகிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே நபி (ஸல்) அவர்களுக்கே அதை விற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மறுநாள் நான் அவர்களிடம் ஒட்டகத்துடன் சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்து விட்டார்கள்.2 அத்தியாயம் :
சுலைமான் பின் மஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகம் (சலம்) செய்யும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவ தாகக்) கூறி உணவு தானியத்தை விலைக்கு வாங்கினார்கள். அவரிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடைமானம் வைத்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறாரோ அவர் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்துவிடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்துவிடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, ‘‘இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்குமேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள். பிறகு, ‘‘(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற் பலன்) குறைந்தவர்கள்; ‘(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர. (இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள், யிஇப்படியெல்லாம்’ என்பதற்கு விளக்கமாக முன்பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள். ஆனால், ‘‘அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘‘நீ இங்கேயே இரு” என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் (நபி (ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் திரும்பி வரும்வரை நீ இங்கேயே இரு” என்று கூறியது என் நினைவுக்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்ட குரல் என்ன?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ‘‘உம்முடைய சமுதாயத்தாரில் எவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்” என்று கூறினார்கள். நான், ‘‘இப்படி இப்படியெல்லாம் செய்தவருமா (விபச்சாரக் குற்றமும் திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘ஆம், (அவரும்தான் சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களுக்குத் தாம் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி,) ‘‘(அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள், ‘‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒரு மனிதர் மரணித்துவிட்டார். அவரிடம் (அடக்கத் தலத்தில் வைத்து), ‘‘நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து)வந்தாய்?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து)வந்தேன்” என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களி டம் தாம் கேட்டதாக அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘‘அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், ‘‘அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது” என்று கூறினர். இதைக் கேட்ட அம்மனிதர், ‘‘(என் உரிமையை) நிறைவாக எனக்கு நீங்கள் அளித்தீர்கள் என்றால், அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பான்” என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்துவிடுங்கள். ஏனெனில், எவர் (தாம் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்து கிறாரோ, அவரே மக்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தாம் கடனாக வாங்கிய) ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (ஒருமுறை) அம்மனிதர் தமது ஒட்டகத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்குக் கொடுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். தோழர்கள் அந்த மனிதருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அதையே) அவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘‘நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பானாக!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் சிறந்தவர், தாம் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். லிஞீமுற்பகல் நேரத்தில் சென்றேன்’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக நினைக்கிறேன் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘இரண்டு ரக்அத்கள் தொழுவீ ராக!” என்று கூறினார்கள். என்னிடம் வாங்கிய ஒரு கடனை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (நான் தொழுது முடித்தபின்) எனக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தியதுடன் எனக்கு அதிகமாகவும் கொடுத்தார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுத் போரின்போது, தம்மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம்பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக்கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம்பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, ‘‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன் களையெல்லாம் திருப்பிச்செலுத்தினேன். (முழுக் கடனையும் அடைத்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதி யிருந்தன. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (உஹுத் போரில் வீர) மரணம் அடைந்தார்கள்; ஒரு யூதருக்கு அவர் (திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக) முப்பது வஸ்க்கு (கனி)களை என் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.3 அதைத் திருப்பிச் செலுத்த எனக்கு அவகாசம் அளிக்கும்படி நான் அந்த யூதரிடம் கேட்டேன். அவர் எனக்கு அவகாசம் தர மறுத்துவிட்டார். எனக்காக (கால அவகாசம் கேட்டு) அந்த யூதரிடம் பரிந்துரை செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த யூதரிடம் வந்து அவருக்குச் சேரவேண்டிய கடனுக்குப் பகரமாக என் பேரீச்சந் தோப்பின் கனிகளை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். அதையும் அந்த யூதர் மறுத்துவிட்டார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் புகுந்து அதன் மரங்களுக்கிடையே நடந்தார்கள். பிறகு என்னிடம், ‘‘அவருக்குப் பறித்துக் கொடு. அவருக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபிறகு, நான் பேரீச்சங் கனிகளைப் பறித்து அந்த யூதருக்கு முப்பது வஸ்க்குளையும் (நிறைவாகக்) கொடுத்துவிட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பதினேழு வஸ்க்குகள் (அளவுக் குப் பேரீச்சங் கனிகள்) மீதியிருந்தன. பின்னர் நான் நடந்ததைத் தெரிவிப்ப தற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்ப தைக் கண்டேன். அவர்கள் (சலாம் கொடுத்துத்) திரும்பியதும் பேரீச்சங் கனிகள் மீதியிருப்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தச் செய்தியை கத்தாபின் புதல்வரிடம் (உமரிடம்) தெரிவி” என்று கூறினார்கள். எனவே, நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்ததும் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்சமரங்களுக் கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் யிபரக்கத்’ (அருள் வளம்) வழங்கப்படும் என்று நான் அறிந்துகொண்டேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும்போது, ‘‘இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந் தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புக் கோருவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.4 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ஒருவர் (இறக்கும்போது) ஒரு செல் வத்தை விட்டுச்சென்றால், அது அவரு டைய வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மக்களை விட்டுச்சென்றால், அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் எவராயினும் அவருக்கு இந்த உலகிலும் மறுவுலகிலும் நானே மிக நெருக்கமான (உரிமையுடைய) வன் ஆவேன். நீங்கள் விரும்பினால், யிதிண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைவிட நபிதான் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்’ (33:6) எனும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி) மரணித்து ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தைவழி உறவினர்கள் லி அவர்கள் எவ்வகையினராயினும் சரிலி அதற்கு வாரிசுகளாகட்டும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கிறாரோ அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குக் காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.5 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதியுள்ளவர் (தமது கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாய மாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், தாம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் சற்றுக் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். (இதைப் புரிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்கு(க் கடுமையாக)ப் பேச உரிமையுண்டு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தமது பொருளை அப்படியே (கொடுத்த போது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள மற்ற கடன் காரர்களைவிட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், தாம் இறந்தபிறகு தம்முடைய ஓர் அடிமை விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), ‘‘இவரை யார் என்னிடத்திலிருந்து வாங்கிக்கொள்வது?” என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அவ்வடிமையை வாங்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமைக்கான விலையை வாங்கி அந்த அடிமையின் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டார் கள்.9 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றிக் கூறினார்கள். அவர், தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் கடன் கேட்டார். அந்த மனிதரும் ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்னும் நிபந்தனையுடன் அவருக்குக் கடன் கொடுத்தார்... என்று முழு ஹதீஸையும் கூறினார்கள்.10 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் வியாபாரத்தில் (அடிக்கடி) ஏமாற்றப் பட்டுவிடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ வியாபாரம் செய்யும்போது (ஒரு பொருளை வாங்கும்போது, அல்லது விற்கும்போது) யிமோசடி கூடாது’ என்று சொல்லிவிடு” என்றார்கள். அதற்குப் பிறகு, அந்த மனிதர் அவ்வாறே கூறிக்கொண்டி ருந்தார். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும், (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும், பிறரது செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக்கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். தேவையற்ற வீண் பேச்சுகள் பேசுவதையும் அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வெறுத் துள்ளான். இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப் பாளரே. தமது பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தம் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தனது பொறுப்புக்கு உட்பட்ட வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் உரிமையாளனின் உடைமை களுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். ‘‘இவையனைத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்டேன்” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பாளர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்றும் கூறியதாக நான் நினைக்கிறேன். அத்தியாயம் :