அனைத்து இஸ்லாம் நூலகம்

15 - மழை வேண்டுதல்

1

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திப்பதற்காக (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். (பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்தபோது) தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் இருந்த பகுதியை இடப் பக்கத் தோளின் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். அத்தியாயம் :

2

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) கடைசி ரக்அத்தின் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும், “இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை கடுமையாக்குவாயாக! இறைவா! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர் களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று கூறிவந்தார்கள். மேலும் ‘ஃகிஃபார்’ குலத்தாருக்கு இறைவன் மன்னிப்பு அளிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தாருக்கு அல்லாஹ் சமாதானத்தை அளிப்பானாக!” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தப் பிரார்த்தனை முழுவதும் சுப்ஹு தொழுகையிலேயே நடந்தது.2 அத்தியாயம் :

3

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிப் பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளை அளித்(து இவர் களைத் திருத்)திடுவாயாக!” என்று பிரார்த் தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அவர்கள் பசியால் தோல்களையும் செத்தவற்றையும் பிணங் களையும் புசிக்க நேர்ந்தது. பசி பட்டினி யால் (கண் பஞ்சடைந்து பார்வை மங்கி) அவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி னால் (தமக்கும் வானத்திற்குமிடையே) அவர் புகை (போன்ற ஒன்றை)யே காண்பார். இந்நிலையில் (குறைஷியரின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! இறைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் உறவுகளைப் பேண வேண்டும் என்றும் நீர் கட்டளையிடுகிறீர். உம்முடைய சமுதாயத்தார் அழிந்து விட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்திப்பீராக!” என்று கூறினார். பிறகு “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீராக!” என்று தொடங்கி, “நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிச் செல்கிறீர்கள்; கடுமையான முறையில் நாம் பிடிக்கும் அந்நாளில்” என்று முடியும் (44:10-16) வசனங்களை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ (பத்ஷத்) என்பது பத்ர் போரைக் குறிக்கும். புகையும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும் ‘அர்ரூம்’ அத்தியாயத்திலுள்ள (பாரசீகர் களால் கிழக்கு ரோமர்கள் தோற்கடிக்கப் படுவது பற்றிய) முன்னறிவிப்பும் நடந்து முடிந்துவிட்டன.3 அத்தியாயம் :

4

5

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் பஞ்சத்தால் பீடிக்கப்படும்போது (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், அப்பாஸ் பின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்களை, மழைவேண்டிப் பிரார்த்திக்கும்படி கேட்பார்கள். (அந்நேரங்களில்) உமர் (ரலி) அவர்கள், “இறைவா! எங்கள் நபியவர்கள் (இருக்கும் வரை அவர்களைப் பிரார்த்திக்கச் சொல்லி, அதன்) மூலம் உன்னிடம் நாங்கள் உதவி கோரிவந்தோம். நீயும் (அதை ஏற்று) எங்களுக்கு மழை பொழிவித்துவந்தாய். இப்போது எங்கள் நபியின் தந்தையின் சகோதரர் (அப்பாஸ் (ரலி) அவர்களைப் பிரார்த்திக்கச் சொல்லி அதன்) மூலம் உன்னிடம் (மழை பொழியும்படி) கோருகின்றோம். எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக!” என்று வேண்டுவார்கள். அதன்படி மக்களுக்கு மழையும் பெய்துவந்தது.5 அத்தியாயம் :

6

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோள்மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.6 அத்தியாயம் :

7

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டிப் பிரார்த்திக்கலானார்கள். அப்போது ‘கிப்லா’ திசையை முன்னோக்கி, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டு (மக்களுடன்) இரண்டு ரக்அத்கள் தொழு தார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர் களே தொழுகை அறிவிப்பு முறையான பாங்கை (கனவில்) கண்டவர் ஆவார் என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். ஆனால், அது தவறு. ஏனெனில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அன்சாரிகளிலுள்ள ‘மாஸின்’ குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். (பாங்கைக் கனவில் கண்டவர் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.) அத்தியாயம் :

8

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, மேடைக்கு எதிர்த் திசையி-ருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்தார். அவர் நின்றுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ் வின் தூதரே! (பஞ்சத்தால்) கால்நடை(ச் செல்வங்)கள் அழிந்துவிட்டன; சாலை களில் போக்குவரத்து நின்றுவிட்டது. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் எங்களுக்கு மழை பொழியச்செய்வான்” என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக் கூட்டத்தையோ தனி மேகத்தையோ (மழைக்கான அறிகுறிகள்) வேறு எதையுமோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (மதீனாவிலுள்ள) ‘சல்உ’ மலைக்கும் இடையே (மழை மேகத்தைப் பார்க்க முடியாதவாறு தடுக்கக்கூடிய) எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியே இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்னா-ருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு (அடிவானில்) பரவியது. பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு (ஏழு) நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தியபோது ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். (வந்தவர்) நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (தொடர்ந்து பெய்த பெருமழையால் எங்கள் கால் நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்கள்மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே! இறைவா! குன்றுகள், மலைகள், கோட்டைகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச்செய்வாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே (மதீனாவில்) மழை நின்றது. நாங்கள் வெயி-ல் நடந்து சென்றோம். இதன் அறிவிப்பாளரான ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முத-ல் வந்தவர்தானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

9

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது) நின்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது, ‘தாருள் களா’ எனும் இல்லத்தின் திசையி-ருந்த வாசல் வழியாக ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக் குள் வந்தார்.9 அவர் நின்றுகொண்டே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! (கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; சாலை களில் போக்குவரத்து நின்றுவிட்டது. எனவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நமக்கு மழை பொழியச்செய்வான்” என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “இறைவா! எங்களுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்க ளுக்கு மழை பொழியச்செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்தில் மேகக்கூட்டத்தையோ தனி மேகத் தையோ நாங்கள் பார்க்கவில்லை. எங்களுக்கும் ‘சல்உ’ மலைக்கும் இடையே (மழைமேகத்தைப் பார்க்க முடியாதவாறு) எந்த வீடும் கட்டடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியே இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின்னா-ருந்து கேடயம் போன்று (வட்ட வடிவில்) ஒரு மேகம் தோன்றியது. அது நடுவானில் மையம் கொண்டு (அடிவானில்) பரவியது. பிறகு மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஆறு (ஏழு) நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. (அடுத்த) ஜுமுஆவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றிக்கொண்டிருந்தபோது அதே வாசல் வழியாக ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ் வின் தூதரே! (பெருமழையால் கால்நடைச்) செல்வங்கள் அழிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே, எங்களைவிட்டு மழையை நிறுத்தும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்!” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தினார்கள். பிறகு “இறைவா! எங்கள் சுற்றுப்புறங் களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடு வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! இறைவா! குன்றுகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின்மீது (இம்மழையைப் பொழியச்செய்வாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே மழை (மதீனாவில்) நின்றது. நாங்கள் வெயி-ல் நடந்து சென்றோம். ஷரீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “இ(ரண்டாவதாக வ)ந்த மனிதர் முத-ல் வந்த மனிதர்தானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

10

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்துவிட்டது. ஆகவே, எங்களுக்கு மழை பொழியச்செய்யுமாறு அல்லாஹ் விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். எங்களுக்கு மழை பெய்தது. (எந்த அளவுக்கென்றால்) எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியவில்லை. அடுத்த ஜுமுஆவரை எங்களுக்கு மழை நீடித்தது. (அந்த ஜுமுஆவில்) ‘அந்த மனிதரோ’ அல்லது ‘மற்றொரு மனிதரோ’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இ(ந்த மழை மேகத்)தை எங்களைவிட்டு (வேறு பகுதிக் குத்) திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப் புறங்கள்மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக)! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!” என்று பிரார்த் தித்தார்கள். உடனே அம்மேகம் வலப் புறமும் இடப் புறமுமாகப் பிரிந்து சென்று அங்கிருந்தவர்களுக்குப் பொழிந்தது. மதீனாவாசிகளுக்கு மழை பொழிய வில்லை. அத்தியாயம் :

11

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் (மழை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து அடுத்த ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) அதே மனிதர் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப் பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் மழையை நிறுத்துவான்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து, “இறைவா! குன்றுகள், மேடுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியனவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே அம்மேகம் ஆடை விலகுவதைப் போன்று (மதீனாவி-ருந்து) விலகிவிட்டது. அத்தியாயம் :

12

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத் தால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; போக்குவரத்து நின்றுவிட்டது. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து மறு ஜுமுஆவரை மக்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கன மழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்துவிட்டன” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!)” என்று பிரார்த்தித் தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவைவிட்டு ஆடை விலகுவதைப் போன்று விலகிவிட்டது. அத்தியாயம் :

13

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு வெள்ளிக்கிழமை அன்று) ஒரு மனிதர் (கடும் வறட்சியால் கால்நடைச்) செல்வம் அழிவது பற்றியும் குடும்பங்கள் அல்லலுறுவது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் மழை பொழிவிக்குமாறு பிரார்த்தித்தார்கள். இதில், நபி (ஸல்) அவர்கள் தமது மேல்துண்டை மாற்றிப்போட்டதாகவோ கிப்லாவை முன்னோக்கியதாகவோ அறிவிப்பாளர் கூறவில்லை. அத்தியாயம் :

14

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (வெள்ளிக்கிழமை அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்து விட்டன; போக்குவரத்து தடைப்பட்டு விட்டது. (மழை வேண்டி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அந்த ஜுமுஆவி-ருந்து மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (அடுத்த ஜுமுஆவில்) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் வின் தூதரே! (கனமழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப் பட்டுவிட்டன; கால்நடைகள் அழிந்து விட்டன” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! மலை உச்சிகள், குன்றுகள், ஓடைகள், மேய்ச்சல் நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம்மழையைத் திருப்பி விடுவாயாக!)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே அம்மேகக் கூட்டம் மதீனாவை விட்டு ஆடை விலகுவதைப் போன்று விலகிவிட்டது. அத்தியாயம் :

15

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் கூறினார்கள்: குறைஷி (இணைவைப்பாளர்)கள் இஸ்லாத்தை ஏற்காமல் காலம் தாழ்த்தியபோது, (அவர்களைத் திருத்த) அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். இதனால் அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, (பட்டினியால்) அழிவைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் (பட்டினியால்) செத்தவற்றையும் எலும்புகளையும் புசிக்கலாயினர். இந்நிலையில் (குறைஷி இணைவைப் பாளர்களின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உறவுகளைப் பேணுமாறு உத்தரவிட்டபடி நீர் வந்தீர். உமது சமுதாயமோ அழிந்து கொண்டிருக்கின்றது. எனவே, (பஞ்சம் விலக) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீர்” (44:10) எனும் வசனத்தை ஓதிக் காட்டி னார்கள். (பஞ்சம் விலகியதும் பழையபடி) குறைஷியர் தம் இறைமறுப்புக்கே திரும் பிச் சென்றுவிட்டனர். இதைத்தான் “(அவர்களை) நாம் பலமாகப் பிடிக்கும் நாளில்” (44:16) எனும் வசனம் குறிப்பிடு கின்றது. (இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ என்பது) பத்ர் போர் தினமாகும். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். மக்களுக்கு மழை பொழிந்தது. ஏழு நாட்கள் அடை மழை பெய்தது. கனமழை குறித்து மக்கள் (நபியவர்களிடம்) முறையிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இம்மழையைத் திருப்பிவிடுவாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே!” என்று பிரார்த்தித்தார்கள். உடனே உச்சியிலிருந்த மேகம் விலகியது. சுற்றுப்புற மக்களுக்கு மழை பொழிந்தது. அத்தியாயம் :

16

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (சொற்பொழிவு மேடைமீது நின்று) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து உரத்த குர-ல், “அல்லாஹ்வின் தூதரே! மழை பொய்த்துவிட்டது; (பச்சை) மரங்கள் (காய்ந்து) சிவந்துவிட்டன; கால்நடைகள் அழிந்துவிட்டன. எனவே, மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்?” என்று கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!” என்று (இரு முறை) கூறி னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது வானத்தில் ஒரு சிறு மேகத்தைக்கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் உருவாகி மழை பொழிந்தது. நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையி-ருந்து இறங்கி (ஜுமுஆ தொழுகை) தொழுவித்தார்கள்; தொழுகையை முடித்தார்கள். அப்போதும் மழை விடாமல் அடுத்த ஜுமுஆவரை நீடித்தது. (அந்த ஜுமுஆவில்) நபி (ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அவர்களை நோக்கி மக்கள் எழுந்து, “(பெரு மழையால்) வீடுகள் இடிந்துவிட்டன; பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் நம்மைவிட்டு மழையை நிறுத்துவான்” என்று உரத்த குர-ல் கூறினர். நபி (ஸல்) அவர்கள் (இதைக் கேட்டு) புன்னகை புரிந்தார்கள். பின்னர் “அல்லாஹும்ம! ஹவாலைனா; வ லா அலைனா” (“இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களுக்கு இதைத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே!”) என்று பிரார்த்தித்தார்கள். உடனே (சூழ்ந்திருந்த மேகம் விலகி) மதீனா தெளிவடைந்தது. அதன் சுற்றுப்புறங்களில் மழை பொழியலாயிற்று. மதீனாவில் ஒரு துளி மழைகூடப் பெய்ய வில்லை. அப்போது நான் மதீனாவை நோக்கினேன். அது கிரீடத்திற்குள் இருப்பதைப் போன்று (அதாவது நகரைச் சுற்றி மேகங்கள் சூழ நடுவில் இருப்பதைப் போன்று) இருந்தது. அத்தியாயம் :

17

அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்த திறந்தவெளிக்குப்) புறப்பட்டுச் சென்றார் கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகி யோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரி னார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.10 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துள் ளார்கள். அத்தியாயம் :

18

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்களுக்காக மழைவேண்டிப் பிரார்த்திக்க மக்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். நின்றவண்ணமே அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு ‘கிப்லா’ திசை நோக்கித் திரும்பினார்கள். தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார் கள். மக்களுக்கு மழை பொழிந்தது. அத்தியாயம் :

19

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க (திறந்தவெளி நோக்கிப்) புறப்பட்டுச் சென்றார்கள். (அங்கு) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்று பிரார்த்திக்கலானார்கள். தமது மேல் துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள். அத்தியாயம் :

20

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க புறப்பட்டுச் சென்றபோது அவர்களை நான் பார்த்தேன். (உரையாற்றியபின் பிரார்த்திக்க முற்பட்டபோது) அவர்கள் மக்களை நோக்கி இருக்கும் விதத்தில் தமது முதுகைத் திருப்பி, கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்திக்கலானார்கள். தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் கிடந்த பகுதியை இடப் பக்கத் தோளுக்கு) மாற்றிப் போட்டுக்கொண்டார் கள். பிறகு எங்களுக்கு இரண்டு ரக்அத் கள் தொழுவித்தார்கள். அவற்றில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள். அத்தியாயம் :

21

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது, இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண் டார்கள். அத்தியாயம் :

22

அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்க தொழும் திடலுக்குச் சென்றார் கள். கிப்லாவை நோக்கி (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “தமது மேல்துண்டின் வலப்புறத்தை இடப் பக்கத் தோளின்மீது (மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்)” என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

23

அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மழைத் தொழுகை) தொழுவதற்காகத் தொழும் திடலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ‘அவர்கள் பிரார்த்தனை புரிந்தபோது’ அல்லது ‘பிரார்த்தனை புரிய முற்பட்ட போது’ கிப்லாவை முன்னோக்கினார்கள். தமது மேல்துண்டை (அதன் வலப் புறத்தை இடப் பக்க தோளின் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய) நான் கூறுகிறேன்: இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் ‘மாஸினீ’ குலத்தைச் சேர்ந்தவர்; முன்பு இடம்பெற்ற (1022ஆவது) ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூஃபாவாசி ஆவார். அத்தியாயம் :

24

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு வெள்ளிக்கிழமை அன்று கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்துவிட்டன; குடும்பமும் அழிந்துவிட்டது; மக்களும் அழிந்தனர்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தனர். நாங்கள் பள்ளிவாசலைவிட்டு வெளி யேறவில்லை. அதற்குள் எங்களுக்கு மழை பெய்தது. மறு வெள்ளிக்கிழமை வரும்வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர்; பாதைகள் அடைபட்டு விட்டன” என்று கூறினார். அத்தியாயம் :

25

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய அக்குள் களின் வெண்மையை நான் பார்க்குமள வுக்கு (மழைவேண்டிப் பிரார்த்திக்கும் போது) அவர்கள் தம் கைகளை உயர்த்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

26

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போதல்லாமல் வேறு எந்தப் பிரார்த்தனையின்போதும் (இந்த அளவுக்கு) கைகளை உயர்த்தமாட்டார்கள்; (மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது) தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு அவர்கள் கைகளை உயர்த்துவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

27

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால், ‘ஸய்யிபன் நாஃபிஅன்’ (பயனுள்ள மழையாக ஆக்குவாயாக!) என்று கூறுவார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

28

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது (நின்று) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன; குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்கு மழைபொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரார்த்தனை புரிய) தம் கைகளை உயர்த்தினார்கள்.- அப்போது ஒரு சிறு மேகம்கூட வானத்தில் காணப்பட வில்லை.- (நபி (ஸல்) அவர்கள் பிரார்த் தனை செய்து முடிப்பதற்குள்) மலை களைப் போன்ற மேகங்கள் கிளர்ந்தெழத் தொடங்கின. பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது மேடையி-ருந்து இறங்கியிருக்க வில்லை; அதற்குள் (மழை பொழியத் தொடங்கி) அவர்களது தாடியில் மழை நீர் வழிவதை நான் கண்டேன். அந்த நாள், அடுத்த நாள், அடுத்த நாள், அதற்கடுத்த நாள் (இப்படியே) மறு ஜுமுஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. (மறு ஜுமுஆவில்) ‘அதே கிராமவாசி’ அல்லது ‘மற்றொரு மனிதர்’ எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! கட்டடங்கள் இடிந்துவிட்டன; செல்வங்கள் நீரில் மூழ்கிவிட்டன. எனவே, (மழையை நிறுத்துமாறு) எங்களுக்காக அல்லாஹ் விடம் வேண்டுங்கள்” என்றார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம! ஹவாலைனா, வ லா அலைனா” (இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு இம்மழையைத் திருப்பிவிடுவாயாக எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே) எனப் பிரார்த்தித்தார்கள். வானத்தின் எப்பகுதியை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்களோ அங்கெல்லாம் மேகங்கள் கலைந்துசெல்லாமல் இருக்கவில்லை. (மதீனா நகரைவிட்டு மேகம் விலகி அதன் சுற்றுப்புறங்களில் நிலைகொண்டதால்) மதீனா பாதாளம் போன்று மாறிவிட்டது. ‘கனாத்’ ஓடையில் ஒரு மாதம் தண்ணீர் ஓடியது. எந்தப் பகுதியி-ருந்து யார் வந்தாலும் இந்த பெருமழை பற்றிப் பேசாமல் இருக்கவில்லை. அத்தியாயம் :

29

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கடுமையான காற்று வீசும்போது, அ(தன் பாதிப்பான)து நபி (ஸல்) அவர் களது முகத்தில் காணப்படும்.11 அத்தியாயம் :

30

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘ஸபா’ எனும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ‘ஆத்’ சமூகத்தார் (‘தபூர்’ எனும்) மேலைக் காற்றால் அழிக்கப்பட்டனர்.12 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

31

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வி கைப்பற்றப்படாத வரை, நில நடுக்கங்கள் அதிகமாகாத வரை, காலம் சுருங்கிடாத வரை, குழப்பங்கள் வெளிப்படாத வரை, ‘ஹர்ஜ்’ (கொந்தளிப்பு) மிகுதியாகாத வரை, -ஹர்ஜ் என்பது கொலையாகும்; கொலையாகும்- உங்களிடையே செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

32

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இறைவா! எங்கள் ‘ஷாம்’ (சிரியா) நாட்டில் எங்களுக்கு வளத்தை வழங்கு வாயாக! இறைவா! எங்கள் ‘யமன்’ நாட்டில் எங்களுக்கு வளத்தை வழங்குவாயாக!” என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள். மக்கள் (சிலர்), “எங்கள் நஜ்த் (இராக்) நாட்டிலும் (வளம் ஏற்படப் பிரார்த்தியுங் களேன்!)” என்று (இரண்டு முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

33

ஸைத் பின் கா-த் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைபியா’ எனும் இடத்தில் எங்களுக்கு சுப்ஹு தொழுகை தொழுவித்தார்கள்.- அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கித் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ் வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். அப்போது, “என் அடியார்களில் என்னை நம்பக்கூடியவர்களும் உள்ளனர்; (நன்றி கொன்று) என்னை மறுக்கக்கூடியவர்களும் உள்ளனர். ‘அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களே என்னை நம்பி நட்சத்திரத்தை மறுத்தவர்கள் ஆவர். ‘இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது)’ என்று கூறியவர்களோ (நன்றி கொன்று) என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்கள் ஆவர்” என அல்லாஹ் சொன்னான் என்று கூறினார்கள். அத்தியாயம் :

34

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருப்பைகளில் என்ன உருவாகும் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். எந்த உயிரும், தான் நாளை எதைச் சாம்பாதிக்கும் என்பதை அறியாது. எந்த உயிரும், தான் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மழை எப்போதுவரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.15 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :